சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொங்கல் பரிசு தேர்தலுக்கு பின்னரே வழங்க கோரிய வழக்கு இன்று மதியம் விசாரணை

Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பொங்கல் பரிசு தேர்தலுக்கு பின்னரே வழங்க கோரிய வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27மற்றும் 30 ம் தேதிகளில் நடைப்பெற உள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு பொங்கல் பரிசு வழங்கப்படும் என நேற்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

pongal gift : petition in HC, seeking to give pongal gift after local elections

இது வாய்மொழி உத்தரவாக மட்டுமே இருப்பதால் உரிய உத்தரவுகள் பிறப்பித்து நீதிமன்றத்தில் உத்தரவு நகலை தாக்கல் செய்ய வேண்டும்

தேர்தல் நேரத்தில் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் வழங்குவது மறைமுகமாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வகை செய்யும் என்பதால் உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின்னரே பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில், திருவண்ணாமலையை சேர்ந்த அலமேலு என்பவர் தரப்பில் வழக்கறிஞர் மணிவாசகம் என்பவர் இன்று முறையிட்டார்.

இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள் பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

English summary
pettion in madas high court , should give pongal gift after local body elections in tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X