தமிழக மக்களுக்கு மீண்டும் ரூ.1000 பொங்கல் பரிசு.. முதல்வர் அறிவிப்பு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்!
சென்னை: அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் ரூ.1000 பொங்கல் பரிசினை முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதன்படி அரிசி கார்டு வைத்துள்ள அனைவருக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டும் பொங்கல் பரிசாக மக்களுக்கு ரூ.1000 ரொக்க பணம் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது. அத்துடன் வழக்கமாக வழங்கப்படும் பொங்கலுக்கு தேவையான அரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, போன்றவையுடன வேட்டி சேலையும் வழங்கப்பட்டன.
இந்த ஆண்டும் இதே போன்று ரூ.1000 ரொக்க பணம், அரிசி, கரும்பு, வேட்டி, சேலை, சர்க்கரை உள்பட பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.
முன்னதாக சர்க்கரை ரேஷன் கார்டுகளை அரிசி ரேஷன் அட்டையாக மாற்ற இன்றுடன் அவகாசம் முடிந்த நிலையில் மேலும் 3 நாட்கள் அவகாசத்தை நீடித்தது அதாவது வரும் 29ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது
இன்னும் உங்க ரேஷன் கார்ட்டை அரிசி கார்டாக மாற்றவில்லையா.. அவகாசம் கொடுத்திருக்கு தமிழக அரசு