சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொன்பரப்பி கலவரம்: டிக்டாக் ஆப்பில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட இளைஞர் கைது

Google Oneindia Tamil News

Recommended Video

    Ponparappi issue : டிக்டாக் ஆப்பில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட இளைஞர் கைது- வீடியோ

    சென்னை: பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக டிக்டாக் ஆப்பில் சர்ச்சைக்கரிய கருத்து பதிவிட்ட இளைஞரை சென்னை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் வாக்குப்பதிவின் போது இரு சமூகத்தினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள், பைக்குகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கலவரத்தில் ஈடுபட்ட பலரை கைது செய்தனர்.

    ponparappi issue : one arrested by chennai police who create violence by tik tok app

    பாப்பிரெட்டிபட்டி உட்பட 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குபதிவு.. தேர்தல் அதிகாரி அதிரடி பரிந்துரை!பாப்பிரெட்டிபட்டி உட்பட 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குபதிவு.. தேர்தல் அதிகாரி அதிரடி பரிந்துரை!

    மேலும் கலவரத்தில் தொடர்புடைய ஏராளமானோரை போலீசார் தேடிவருகிறார்கள். இந்நிலையில் பொன்பரப்பி சம்பவத்தை பரப்பி பலர் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில், பொன் பரப்பியில் மீண்டும் மீண்டும் கலவரத்தை தூண்டும் வகையில் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு வந்தது சென்னை அசோக் நகரில் விஜயகுமார்(28), மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு நண்பர்கள் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அசோக் நகர் போலீசார் நேற்று காலை டிக்டாக்கில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட விஜயக்குமாரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது நண்பர்கள் இரண்டு பேரை தேடி வருகிறார்கள்.

    English summary
    ponparappi issue : one arrested by chennai police who create and spread violence by tik tok app; 2 others escaped
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X