சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மத்திய அரசின் தடைக்கு எதிர்ப்பு.. இந்தியா முழுவதும் இன்று தடையை மீறி "போராட்டம்" அறிவித்த பிஎஃப்ஐ

Google Oneindia Tamil News

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ள நிலையில் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பி.எஃப்.ஐ அமைப்பு அறிவித்துள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடு முழுவதும் கிளைகளை பரப்பி செயல்பட்டு வந்தது. தலித், சிறுபான்மை மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள், சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய அரசு, பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்தது.

அதே நேரம் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலவரங்களை தூண்டி வருவதாக குற்றம்சாட்டி அவற்றை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தன.

பிஎஃப்ஐ மட்டுமல்ல.. மொத்தம் “9” - கேம்பஸ் ஃப்ரண்ட், NCHRO, இமாம் கவுன்சில் அமைப்புகளுக்கும் தடை பிஎஃப்ஐ மட்டுமல்ல.. மொத்தம் “9” - கேம்பஸ் ஃப்ரண்ட், NCHRO, இமாம் கவுன்சில் அமைப்புகளுக்கும் தடை

தேசிய புலனாய்வு முகமை

தேசிய புலனாய்வு முகமை

இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் சோதனை செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முக்கிய தலைவர்கள் பலரை கைது செய்து இருக்கிறார்கள். இதனை அந்த அமைப்பினர் மட்டுமின்றி பல்வேறு மதசார்பற்ற இயக்கங்களும், கட்சிகளும் கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

போலீஸ் சோதனை

போலீஸ் சோதனை

இந்த நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் நேற்று மீண்டும் காவல்துறை சோதனை நடத்தியது. பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பி.எஃப்.ஐ. நிர்வாகிகள் வீடுகளில் காவல்துறை சோதனை மேற்கொண்டது.

5 ஆண்டுகள் தடை

5 ஆண்டுகள் தடை

நேற்று நடைபெற்ற சோதனைக்கு பின்னர் நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளை சட்டவிரோதமானவை என அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், அதற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து இருக்கிறது. சட்டவிரோத பண பரிவர்த்தனை, பிரதமர் மோடியை கொல்ல சதி என பல்வேறு குற்றச்சாட்டுகளை அந்த அமைப்பு மீது என்.ஐ.ஏ. சுமத்தியது.

துணை அமைப்பு

துணை அமைப்பு

இத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் துணை அமைப்புகளான ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன், கேம்பஸ் பிரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பு, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில், என்.சி.எச்.ஆர்.ஓ மனித உரிமை அமைப்பு, நேஷனல் உமன்ஸ் ஃப்ரண்ட், ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா ஃபவுண்டேசன், ரிஹாப் ஃபவுண்டேசன் ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

போராட்டம் அறிவிப்பு

போராட்டம் அறிவிப்பு

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு விதித்த தடையை கண்டித்து அந்த அமைப்பு தடையை மீறி இன்று காலை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட நகரங்களில் இன்று காலை 10 மணியளவில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அந்த அமைப்பினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதேபோல் நாடு முழுவதும் போராட இருப்பதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.

English summary
While the Union government has imposed a ban on the Popular Front of India for 5 years, the PFI organization has announced that it will engage in protests across India, including Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X