பணம் கேட்டு ஊட்டிக்கு "கடத்தப்பட்ட" பவர்ஸ்டார் சீனிவாசன் சென்னை காவல் நிலையத்தில் திடீர் ஆஜர்
Recommended Video
சென்னை: பணம் கேட்டு ஊட்டிக்கு கடத்தப்பட்ட பவர்ஸ்டார் சீனிவாசன் சென்னை காவல் நிலையத்தில் ஆஜராகினார்.
பவர்ஸ்டார் சீனிவாசன் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். சில படங்களை தயாரித்தும் உள்ளார். அவர் மீது பணமோசடி புகார்கள் உள்ளன.
இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த சிலர் சீனிவாசனிடம் பணம் கேட்டு அவரை ஊட்டிக்கு கடத்திவிட்டதாக மனைவி ஜூலி புகார் அளித்தார். இந்நிலையில் தாயையும் கடத்திவிட்டதாக பவரின் மகள் வைஷ்ணவி செய்தியாளர்களிடம் பரபரப்பு பேட்டி அளித்திருந்தார்.
அதில் அம்மா ஜூலியின் பெயரில் உள்ள ஒரு சொத்தை தங்கள் பெயருக்கு எழுதி வைக்கக் கோரி இருவரையும் பெங்களூரைச் சேர்ந்த மர்மநபர்கள் கடத்திவிட்டனர். அவரை மீட்டுத் தரக் கோரி வைஷ்ணவி கேட்டுக் கொண்டார்.
பவர்ஸ்டாரை கடந்த 5-ஆம் தேதி முதல் காணவில்லை என கூறப்பட்ட நிலையில் அவரை மட்டும் கடத்தல்காரர்கள் விடுவிப்பதாகவும் பத்திரப் பதிவு முடிந்தவுடன் ஜூலியை அனுப்புவதாகவும் கடத்தல்காரர்கள் கூறியதாக வைஷ்ணவி கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன் ஆஜராகியுள்ளார். போலீஸார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.