ரஜினிகாந்த் முதல்வரானால் நான்.. ? பவருக்கு வர நினைக்கும் பவர் ஸ்டார் சீனிவாசனின் நையாண்டி பேச்சு
சென்னை: ரஜினிகாந்த் முதல்வரானால் என்னை துணை முதல்வராக்க வேண்டும் என பவர் ஸ்டார் சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் அண்மையில் நடந்த சிவகாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி, பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது அந்த விழாவில் பவர் ஸ்டார் பேசினார். அவர் பேசுகையில், நான் இந்த இடத்தில் இருப்பதற்கு ராதாரவிதான் காரணம். சினிமாத் துறையில் நடிக்க முடிவெடுத்த பின்னர் ராதாரவியிடம் ஆலோசனை கேட்டேன். அப்போது அவர் என்னை திட்டிவிட்டார்.
ஹீரோ
ஏன் திட்டுகிறீர்கள் என கேட்டேன். அப்போது நான் ஹீரோவாக நடிக்கிறேன் என சொன்னேன். நீ நகைச்சுவை நடிகராக ஆக வேண்டும் என சொன்னார். அப்போது ஏதோ பொறாமையில் சொல்கிறார் என நினைத்தேன். இவர் இப்படி சொல்லிக் கொண்டே இருக்கட்டும் என நினைத்துக் கொண்டு லத்திகா படத்தில் ஹீரோவாக நடித்தேன். அந்த படம் 400 நாட்கள் ஓடியது.
ராதாரவி
அதற்கடுத்து வில்லனாக நடிக்க வேண்டும் என முடிவெடுத்து ஆனந்த தொல்லை என்ற படத்தில் நடித்தேன். அதன்பிறகு ராதாரவியிடம் சென்றேன். ஏன் இப்படி நடித்து வீணாக போகிறாய் என திட்டினார். அதையும் நான் காதில் போட்டு கொள்ளவில்லை. ஒவ்வொரு படம் தொடங்கும் போதும் ராதாரவியிடம் சென்று திட்டு வாங்கிவிட்டுதான் நடித்தேன்.
கட்சி
என்ன சோதனை வந்தாலும் அதை சாதனையாக்குவதுதான் எனது எண்ணமாக இருந்தது. இதற்காக ரூ 40 கோடி வரை செலவிட்டுவிட்டேன். நடிகர் ரஜினிகாந்திற்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். அரசியல் கட்சியை அவர் சீக்கிரமாக தொடங்க வேண்டும். என்னை உங்கள் கட்சியில் சேர்த்து கொள்ள வேண்டும்.
துணை முதல்வர்
நீங்கள் முதல்வராகிவிட்டீர்கள் என்றால் என்னை துணை முதல்வராக நியமிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் நான் கட்சி ஆரம்பிக்கிறேன். நீங்கள் வாருங்கள் என பவர் ஸ்டார் கூறினார். இதை கேட்ட அங்கிருந்த ஆடியன்ஸ் கை தட்டி வரவேற்றனர். சிலர் ரஜினியையே கலாய்க்கிறாரே என ஆச்சரியமாக பார்த்தனர்.