ரஜினி சாவோடு சடுகுடு ஆடுவார்.. எமன லெமன் மாதிரி புழிஞ்சு வீசுவார்.. பிரவீன் காந்த் ரைமிங் வசனம்!
சென்னை: ரஜினி மரணத்தோடு மங்காத்தா ஆடுவார், சாவோடு சடுகுடு ஆடுவார் என இயக்குநர் பிரவீண் காந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.
ரஜினியை அரசியலுக்கு வர வேண்டாம் என ஆரம்பத்திலிருந்தே சொல்லி வந்தவர் அமிதாப் பச்சன் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் 2017-ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்தவுடன், அவரது நெருங்கிய நண்பர்களான சிரஞ்சீவியும், மோகன்பாபுவும் ரஜினியை தொடர்பு கொண்டார்கள்.
அப்போது அரசியலுக்கு வந்தால் நிம்மதி போய்விடும். நிறைய அழுத்தங்கள் இருக்கும். உடல்நலமும் பாதிக்கப்படும். மேலும் இத்தனை ஆண்டுகளாக நீங்கள் சேர்த்து வைத்த மரியாதை இருக்கவே இருக்காது என அறிவுறுத்தியுள்ளார்கள்.
அப்படியா... ரஜினி ரசிகர் மன்றத்தில் இணைகிறதா காந்திய மக்கள் இயக்கம்..??
ரஜினியிடம் தைரியம்
இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இவர்கள் ரஜினியிடம் தைரியமாக தங்கள் கருத்துகளை முன் வைத்துள்ளார்கள். ஆனால் ரஜினியோ ரசிகர்களுக்கு வாக்கு கொடுத்துவிட்டேன். அதனால் எப்படியாவது வர வேண்டும் என முடிவில்தான் இருந்தார். ஆனால் சந்தர்ப்பம் சூழலென ஒன்று இருக்கிறதே!
உடல்நலம் பாதிப்பு
ஹைதராபாத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 3 நாட்கள் இருந்துவிட்டு டிஸ்சார்ஜ் ஆனவுடன் தனது முடிவை ரஜினி மாற்றிக் கொண்டார். இதையடுத்து அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார். ஆனால் ரஜினி ரசிகர்களோ அவர் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும் என அவரை அழைத்து வருகிறார்கள்.
ஒருவர்தான்
நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடி அறவழி போராட்டத்தை நடத்தினர். அப்போது வா தலைவா வா என கோஷமிட்டனர். ரஜினிகாந்த் தனிக்கட்சியை தொடங்கி உலகையே அச்சுறுத்தணும், அது அவர் ஒருவரால்தான் முடியும் என ரசிகர்கள் தெரிவித்தனர். இதை அங்கிருந்த மற்ற ரசிகர்களும் ஆமோதித்தனர்.
சாவோடு சடுகுடு
இதுகுறித்து இயக்குநர் பிரவீன் காந்த் கூறுகையில் ரஜினி மரணத்தோடு மங்காத்தா ஆடுவார். சாவோடு சடுகுடு ஆடுவார். எமன லெமன் மாதிரி புழிஞ்சு வீசுவார் என டி ராஜேந்தர் பாணியில் அடுக்கு மொழியில் பேசினார். இதனால் இவரது பேச்சை நெட்டிசன்கள் டிரோல் செய்தனர். அவரது உடல்நலனை மதிக்காமல் ஏன் இப்படி அவரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்துகிறீர்கள் என பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.