சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரசவ வலிக்கு பயந்து கொண்டு.. 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் சென்னை..!

சென்னையில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டார்

Google Oneindia Tamil News

சென்னை: பிரசவ நேரத்தில் வலி அதிமாக இருக்குமே என்று பயந்து பெண் 5 மாத கர்ப்பிணி, உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் நாகராஜ்.. இவர் ஒரு கார்பென்டர்.. மனைவி பெயர் சுஷ்மிதா.. 23 வயதாகிறது.. இவர்கள் 2 பேரும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டனர். சுஷ்மிதா இப்போது 5 மாதம் கர்ப்பமாக இருந்தார்.

Pregnant woman commits suicide in Chennai

கர்ப்பமான சமயத்தில் இருந்தே சுஷ்மிதாவுக்கு வயிற்று வலி அடிக்கடி வந்து போயுள்ளது.. இதை ற்றி வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லவும், இந்த மாதிரி நேரததில் அப்படித்தான் இருக்கும், கொஞ்சம் பொறுத்து கொள்ளும்படியும் ஆறுதல் தெரிவித்துள்ளனர்..

ஆனால் பிரசவ வலிக்கு பயந்துபோன சுஷ்மிதா, சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றார்... பிறகு அங்கிருந்த ஒரு ரூமுக்குள் நுழைந்து திடீரென தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தீ வைத்து கொண்டார்.

தேஜஸ்வி ஹெலிகாப்டரை முற்றுகையிட்ட கும்பல்.. பீதியில் ஆர்ஜேடி.. பாதுகாப்பு கேட்கிறது தேஜஸ்வி ஹெலிகாப்டரை முற்றுகையிட்ட கும்பல்.. பீதியில் ஆர்ஜேடி.. பாதுகாப்பு கேட்கிறது

உடல் முழுவதும் தீப்பிடித்து கொண்டு பற்றி எரிந்தது.. வலி தாங்காமல் சுஷ்மிதா அலறினார்.. அப்போதுதான் அவரது சத்தம் கேட்டு குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும ஓடிவந்தனர்.. நெருப்பில் வெந்து கொண்டிருந்த மகளை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

எனினும், டாக்டர்கள் போராடியும் சுஷ்மிதாவை காப்பாற்ற முடியவில்லை.. சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.. இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

English summary
Pregnant woman commits suicide in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X