சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் கண்ணன் அதிரடி டிரான்ஸ்பர்- காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
சென்னை: சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் கண்ணன் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு கண்ணன் மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக இருந்தவர் கண்ணன். நேற்று நள்ளிரவில் திடீரென கண்ணன் இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதில் வடக்கு மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா, தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள பிரேம் ஆனந்த் சின்ஹா, ஏற்கனவே இதே பொறுப்பு வகித்தவர். பின்னர் மதுரை காவல் ஆணையராக மாற்றப்பட்டார். அண்மையில்தான் வடக்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டார்.
2001-ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியான பிரேம் ஆனந்த் சின்ஹா, சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
Comments
English summary
Prem Anand Sinha IPS has replaced N Kannan IPS as Chennai South Additional Commissioner Post.