இவரெல்லாம் ஒரு எதிர்க்கட்சி தலைவரா.. அப்படி சொல்லவே வெட்கப்படேறன்.. பிரேமலதா விஜயகாந்த்
தென்சென்னை அதிமுக வேட்பாளருக்காக பிரேமலதா பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
Recommended Video
சென்னை: "அம்மா பெயரில் உருவான இந்த பகுதி கட்டிடங்களின் பெயரை கூட சொல்லாமல் சென்றிருக்கிறார் என்றால், இவர் எல்லாம் ஒரு எதிர்க்கட்சி தலைவரா? அவரை எதிர்கட்சி தலைவர்னு சொல்லவே நான் வெட்கப்படுகிறேன்" என்று பிரேமலதா விஜயகாந்த் தென்சென்னை பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.
தென் சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் அதிமுக சார்பாக போட்டியிடுகிறார், அவரை ஆதரித்து கூட்டணி கட்சியான தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று கண்ணகி நகரில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது வேட்பாளர் ஜெயவர்தன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர். பொதுமக்களிடம் பிரச்சார வேனில் இருந்தவாறு பிரேமலதா பேசியதாவது:
எதிர்க்கட்சி தலைவரா?
இங்கு இருக்கக்கூடிய கண்ணகி நகர், எழில் நகர் இக்கட்டிடங்கள் எல்லாம் அம்மாவால் உருவானது. ஆனால் இங்கு வந்த ஸ்டாலின், பொறாமை காரணமாக இப்பகுதியின் பெயரை கூட சொல்லாமல் சோழிங்கநல்லூர் என்று பொதுவாக சொல்லிவிட்டு போயிருக்கிறாரே.. இவரெல்லாம் ஒரு எதிர்க்கட்சி தலைவரா? அப்படிபட்டவர் பெயரை சொல்ல நான் வெட்கப்படுகிறேன்
இலவச பட்டா
20 வருஷமா உங்களை பார்க்க வராமல் இப்போ வந்திருக்கிறது தேர்தலுக்காத்தான். ஆனால் ஜெயவர்தன் அப்படி இல்லை. தேர்தலில் ஜெயித்து வந்தால், 20 வருஷங்களுக்கு மேல் இப்பகுதியில் வசிப்போருக்கு இலவச பட்டா வழங்கப்படும்.
உரிமைகள்
இந்த தொகுதியில் நமக்கு என்ன வேண்டுமோ அதனை நிச்சயமாக மோடியிடம் பேசி ஜெயவர்தன் கொண்டு வருவார். கண்ணகி நகர், எழில் நகர் பகுதிக்கு தேவையான அத்தனை உரிமைகளை மீட்டு வருவார். ஸ்டாலினின் கூட்டணி ரவுடியிசம் கூட்டணி, கட்டப்பஞ்சாயத்து கூட்டணி, கடவுள் இல்லை என கூறும் கூட்டணி" என்று குற்றஞ்சாட்டினார் பிரேமலதா.
அதே தொனி
கடைசியாக அங்கிருந்து கிளம்பும்போது, அதனால ஸ்டாலினுக்கு நீங்கள் நல்ல பாடத்தை கற்று தருவீர்களா? சாதனை வெற்றியை தருவீர்களா? அதிமுகவுக்கு ஓட்டு போடுவீர்களா? என்று இதற்கு முன்பு நாம் தமிழத்தில் கேட்ட அதே தொனியில் பொதுமக்களிடம் கேள்விகளை எழுப்பி எழுப்பி வாக்கு கேட்டுவிட்டு சென்றார் பிரேமலதா!