சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சோஷியல் மீடியாவில் ஆபாச போஸ்ட் போடுவது யார்? பட்டியல் தயார் செய்யுங்கள்.. சென்னை ஹைகோர்ட் உத்தரவு!

சமூக வலைதளங்களில் ஆபாசமாக கருத்துக்களை பதிவு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசாருக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: சமூக வலைதளங்களில் ஆபாசமாக கருத்துக்களை பதிவு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசாருக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர் நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக சில கருத்துகளை பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்தனர்.

Prepare list who posts sexual posts in Social Media asks MHC

இந்த நிலையில் அவர் ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சமூக வலைதளங்களில் கடுமையாக ஆபாச வார்த்தைகளைப் போட்டு கருத்து தெரிவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

மாமல்லபுரத்தை அழகுபடுத்த எவ்வளவு தேவை? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு!மாமல்லபுரத்தை அழகுபடுத்த எவ்வளவு தேவை? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு!

சமூக வலைதளங்களில் ஆபாசக் கருத்துக்களை வெளியிட்டு பதிவு செய்தவர்களின் பட்டியலை குறைந்தபட்சம் 10 பேரின் விவரங்களை இன்று மதியத்திற்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

English summary
Prepare list who posts sexual posts in Social Media asks Madras High Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X