நல்ல ஆரோக்கியம், அமைதி, வளம்.. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புத்தாண்டு வாழ்த்து
சென்னை: தமிழ்ப் புத்தாண்டு அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் வளத்தைக் கொண்டு வரட்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டரில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இன்று உலகெங்கும் உள்ள தமிழர்களால் சித்திரை 1ஆம் தேதி, தமிழ்ப் புத்தாண்டு வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காலை முதலே முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டரில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், புத்தாண்டு பிறப்பு நாளில், தமிழ்நாட்டில் உள்ள நமது சகோதர, சகோதரிகளுக்கும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும் நல் வாழ்த்துகள். இந்த புனித நாள் அனைவருக்கும், நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் வளத்தைக் கொண்டு வரட்டும் என அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழ்ப் புத்தாண்டு மட்டுமின்றி இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்களால் இன்று யுகாதி, குடி பத்வா, சஜிபு செராவோபா, நவ்ரே மற்றும் சேட்டி சந்த் ஆகியவையும் கொண்டாடப்பட்டு வருகிறது. அம்மாநில மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்து, மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் அவர் ட்வீட் செய்துள்ளார்.