சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 நாள் சாப்பிட்டால் கொரோனா வராதுன்னு சொன்னாலும் சொன்னாங்க.. அந்த ஹோமியோபதி மருந்துக்கு செம டிமாண்ட்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஹோமியோபதி மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மருந்தை வெறும் வயிற்றில் உட்கொள்ள தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.

சென்னையைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவரான டாக்டர் பூவேந்தன் என்பவர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மருந்தை, கொரோனா சிகிச்சைக்குப் பரிந்துரைக்க வேண்டுமென்றுக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு, இந்த மருந்தை கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தருவதாக கூறியது.

சென்னையில் ஒரே நாளில் 7 பேர் கொரோனாவுக்கு மரணம்.. எல்லாருக்கும் ஒரு ஒற்றுமை.. இறப்பின் பின்னணி சென்னையில் ஒரே நாளில் 7 பேர் கொரோனாவுக்கு மரணம்.. எல்லாருக்கும் ஒரு ஒற்றுமை.. இறப்பின் பின்னணி

3 நாள்

3 நாள்

இந்த மருந்தை எப்படி சாப்பிட வேண்டும் என்றும் அரசு கூறியிருந்தது. அதாவது, 3 நாட்கள் தினமும் காலை, எதையும் சாப்பிடும் முன்பாக, வெறும் வயிற்றில், இந்த மருந்தை சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் தெரிவித்திருந்தது.

ஹோமியோபதி மருந்து

ஹோமியோபதி மருந்து

ஹோமியோபதி மருந்துகள், கொரோனா நோயை குணப்படுத்தும் என்பதற்கான ஆய்வு முடிவுகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் இந்தியாவில் அலோபதி மருத்துவத்தின் அடிப்படையிலான மருந்துகளோடு, இந்திய மருத்துவ முறைகளான சித்தா, யுனானி, மற்றும் ஹோமியோபதி மருந்துகளும் சிகிச்சையின் ஒரு பகுதியாக கொடுக்கப்படுகிறது.

யார் சாப்பிடலாம்

யார் சாப்பிடலாம்

ஒரு முறை ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மருந்தை எடுத்துக் கொண்ட பிறகு, தேவைப்பட்டால் ஒரு மாதம் கழித்து மீண்டும் சாப்பிடலாம். யார் வேண்டுமானாலும் இதை சாப்பிடலாம். வேறு மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களும் சாப்பிடலாம், பக்கவிளைவும் இல்லாத மருந்து என்கிறார்கள் ஹோமியோபதி டாக்டர்கள்.

Recommended Video

    ஹோமியோபதி இருக்க எதற்கு கவலை..? நோய் எதிர்ப்பு சக்திக்கு அருமையான மருந்து உள்ளது -Dr.ஞானசம்பந்தன்
    விலை அதிகரிப்பு

    விலை அதிகரிப்பு

    இந்த மருந்தை மருந்தகங்களில், மருத்துவர் பரிந்துரை இல்லாமலேயே கொடுக்கிறார்கள். எனவே, இதற்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது.
    சில இடங்களில் 30 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த மருந்து, சில இடங்களில் 200 ரூபாய்க்கு கூட விற்பனை செய்கிறார்கள்.

    English summary
    As The AYUSH ministry recommended that homeopathic medicine Arsenicum album 30 to prevent coronavirus, the price are high in market.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X