தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி
சென்னை: தமிழகத்தில் தனியார் பால் விலை மேலும் 4 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.56க்கு விற்பனையாகி வந்த ஒரு லிட்டர் புல் கிரீம் (கொழுப்பு சத்து நிறைந்த) பால் இன்று முதல் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு அண்மையில் 6 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் ஒரு லிட்டர் ஆவின் பால் விலை ( புல் கிரீம் பால்) 51க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆரோக்கியா நிறுவனம் ரூ.56க்கு விற்பனையாகி வந்த ஒரு லிட்டர் புல் கிரீம்(கொழுப்பு சத்து நிறைந்த) பால் விலையை இன்று முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. இதேபோல் ஹாட்சன் நிறுவனமும் ரூ.56க்கு விற்பனையாகி வந்த ஒரு லிட்டர் புல் கிரீம்(கொழுப்பு சத்து நிறைந்த) பால் விலையை இன்று முதல் 60 ரூபாய்க்கு விற்கிறது.
அதேநேரம் மற்ற அனைத்த வகை பால்களின் விலையும் தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி உள்ளதாக கூறப்டுகிறது
51 நாட்கள் பரோல் முடிந்தது.. மகளின் திருமண ஏற்பாட்டிற்காக வந்த நளினிக்கு மீண்டும் சிறை!
.ஒரே ஆண்டில் 4-வது முறையாக பால் விலையை உயர்த்துவதால் பால் விற்பனை கடுமையாக வீழ்ச்சி அடையும் என பால் விற்பனையாளர்கள் வேதனை தெரிவித்தனர். இந்த பால் விலை உயர்வால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.