புக்ஸோட வாட்டர் பாட்டிலையும் மறக்காம கொண்டு வாங்க.. சென்னை நிலைமை மோசமடைகிறது!
Recommended Video
சென்னை: சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் தனியார் பள்ளிகள் மாணவ, மாணவிகள் கையில் தங்களுக்கு தேவையான தண்ணீரை பாட்டிலில் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளன.
தமிழகம் முழுவதுமே தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
பருவமழை போதுமான அளவு பெய்யாததால் சென்னை முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக சரிந்துள்ளது. இதனால் தனியார் லாரிகளில் தண்ணீர் வாங்கியே வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளை நிரப்பி வருகின்றனர் மக்கள்.
கேரளாவில் நாளை முதல் பலத்த மழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் வார்னிங்
தண்ணீர் கொண்டுவரவேண்டும்
இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் பள்ளிகள் மாணவர்கள் தங்களுக்கு தேவையான குடிநீரை பள்ளிக்கு வரும்போதே கையில் கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் தனியார் பள்ளிகள் இந்த முடிவை எடுத்துள்ளன.
ஏற்கனவே புத்தகப்பை
சில அரசுப்பள்ளிகளிலும் மாணவர்களுக்கு போதுமான அளவு குடி நீர் வசதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே மாணவர்கள் புத்தகப்பைகளை சுமக்க முடியாமல் சுமந்து செல்கின்றனர்.
அரசுக்கு கோரிக்கை
இந்நிலையில் மாணவர்களே கையில் தண்ணீர் பாட்டில்களை கொண்டு வரவேண்டும் என பள்ளிகள் அறிவுறுத்தியிருப்பது பெற்றோரை கவலையடையச் செய்துள்ளது. பள்ளிகளே மாணவர்களுக்கு குடிநீர் வழங்க அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயிரக்கணக்கில் கட்டணம்
பள்ளிகளின் அடிப்படை வசதிகளில் ஒன்று மாணவர்களுக்கு போதுமான குடிநீர் வழங்குவது. ஆனால் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மாணவர்களையே குடிக்க தண்ணீர் கொண்டுவருமாறு கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.