சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை மக்களே ஹேப்பி நியூஸ்.. தனியார் தண்ணீர் லாரி ஸ்ட்ரைக் வாபஸாம்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

அன்றாட தேவைக்கான தண்ணீருக்கு வட மக்கள் பெரும்பாடு பட்டு வருகின்றனர். சென்னை மக்கள் தங்களின் தண்ணீர் தேவைக்கு தண்ணீர் லாரிகளையே நம்பியுள்ளனர்.

ஏன் தோத்தீங்க.. விளக்கம் கொடுங்க.. தமிழக பாஜகவுக்கு மேலிடம் நோட்டீஸ்! ஏன் தோத்தீங்க.. விளக்கம் கொடுங்க.. தமிழக பாஜகவுக்கு மேலிடம் நோட்டீஸ்!

உரிமையாளர்கள் கலக்கம்

உரிமையாளர்கள் கலக்கம்

இந்நிலையில் நீர்நிலை, விளைநிலங்களில் நீர் எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் அண்மையில் தடைவிதித்தது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கலக்கம் அடைந்தனர்.

காலவரையற்ற வேலை நிறுத்தம்

காலவரையற்ற வேலை நிறுத்தம்

மேலும் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவித்திருந்தனர். அதன்படி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக கூறியிருந்தனர்.

தற்காலிக வாபஸ்

தற்காலிக வாபஸ்

நிலத்தடி நீரை எடுக்க உரிமம் வழங்க வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தை தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தங்களின போரட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.

மக்கள் நிம்மதி

மக்கள் நிம்மதி

மக்களின் சிரமத்தை மனதில் கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளோம் என லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

English summary
Private water lorries has withdraw their strike. Private water lorries have announced strike from today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X