நாம் தமிழர் கட்சியை விட்டு விலகிய கல்யாணசுந்தரம் இன்று அதிமுகவில் இணைகிறார்
சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய அதன் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் இன்று அதிமுகவில் இணைகிறார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விமர்சனங்களை முன்வைத்தவர் பேராசிரியர் கல்யாணசுந்தரம். இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் இருந்து கல்யாணசுந்தரம் விலகுவதாக அறிவித்தார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நிலையில் கடந்த சில மாதங்களாக எந்தவித அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபடாமல் இருந்தார் கல்யாணசுந்தரம். இந்த நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கல்யாணசுந்தரம், அதிமுகவில் இணைய உள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம் விலகல்
கல்யாணசுந்தரத்துடன் அவரது ஆதரவாளர்கள் சிலரும் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.