தனிப்படை அமைச்சி தேடுற அளவுக்கெல்லாம் நான் வொர்த் இல்லை சார்.. போலீஸிடம் அழுத மதன்
சென்னை: தனிப்படை அமைத்து தேடும் அளவுக்கு நான் வொர்த் இல்லை என போலீஸாரை பார்த்ததும் பப்ஜி மதன் அழுததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
குறுகிய காலத்தில் எப்படி நிறைய பணம் சம்பாதிப்பது எப்படி என்பதே இன்றைய ஒரு சில மக்களின் மனநிலையாகும். இதில் குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பேர் இந்த மனநிலையுடன் காணப்படுகின்றனர்.
இதற்கு ஏற்ப தகவல் தொழில்நுட்பங்களும் நமக்கு கைக் கொடுக்கின்றன. யூடியூப் சேனலை தொடங்கி அதில் நிறைய சந்தாதாரர்களை பிடித்துவிட்டு வீடியோக்களை அப்லோடு செய்தால் போதும் நோகாமல் நோன்பு கும்பிடும் அளவுக்கு பணம் கொழிக்கும்.
நான் என்ன PMஆ? எதுக்கு வீடியோ எடுக்கறீங்கனு கேட்ட மதன்..
கிருத்திகா
அதைத்தான் பப்ஜி மதனும் அவரது மனைவி கிருத்திகாவும் கையில் எடுத்துள்ளனர். சேலத்தைச் சேர்ந்த பப்ஜி மதன், பப்ஜி விளையாட்டுக்கு சிறுவர்கள் அடிமையாகவுள்ளதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அந்த விளையாட்டை எப்படி சாதுர்யமாக விளையாடுவது என்பது குறித்து யூடியூப் சேனல்களை தொடங்கினார்.
குரல்களை மாற்றி
இதில் மதனும் கிருத்திகாவும் குரல்களை மாற்றி மாற்றி பேசியுள்ளனர். மேலும் வியூஸ் அதிகம் கிடைக்க சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியுள்ளனர். இதுகுறித்து புகார்கள் குவியத் தொடங்கின. இதையடுத்து போலீஸார் மதனை வலைவீசி தேடினர். இதனிடையே இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த கிருத்திகாவை போலீஸார் கைது செய்தனர்.
பப்ஜி மதன்
8 மாதக் குழந்தையை பிரிந்து தற்போது கிருத்திகா சிறையில் இருக்கிறார். இந்த நிலையில் போலீஸுக்கு போக்குக் காட்டிக் கொண்டும் உதார் விட்டுக் கொண்டும் இருந்த பப்ஜி மதன் தருமபுரியில் ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருந்ததை அடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
கெஞ்சி அழுத மதன்
போலீஸார் நெருங்குவதற்கு முன்னர் வீராவசனம் பேசிய மதன், போலீஸாரை பார்த்ததும் ஐயோ சார் என்னை விட்டுடுங்க, தனிப்படை அமைத்து தேடும் அளவுக்கெல்லாம் நான் வொர்த்தே இல்லை சார் என கதறி காலில் விழுந்து கெஞ்சி அழுததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து போலீஸார் அவரை தருமபுரியிலிருந்து சென்னைக்கு இழுத்து வந்தனர்.