சனியன் பிடிச்சவன்.. 3வது அம்பயர் தூக்குப் போட்டு செத்துரணும்.. என்னடா இப்படி ஆயிட்டீங்க
இறுதிபோட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் படுதோல்வி அடைந்ததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்
Recommended Video
சென்னை: கிரிக்கெட் மோகம் எந்தளவுக்கு நம் மக்களை தாக்கியிருக்கிறது என்று பார்த்தால் மிரண்டு போய் விடுவோம். அந்த அளவுக்கு தாக்கம் படு ஜாஸ்தியாக இருக்கிறது.
கிரிக்கெட்டைக் கண்டுபிடித்த வெள்ளையன் கூட அதை இந்த அளவுக்கு நேசித்திருக்க மாட்டான். ஆனால் தெற்காசியர்கள் குறிப்பாக இந்தியர்கள் கிரிக்கெட்டை நேசிக்கும் விதமே தனி அலாதியானது. சாப்பாடு, தூக்கம் இன்றி கிரிக்கெட் மோகத்துடன் வலம் வருகிறார்கள் நமது இளைஞர்கள்.
வேறு எந்த விளையாட்டுக்கும் இப்படி ஒரு மோகம் இருந்ததில்லை, இருப்பதில்லை. ஆனால் கிரிக்கெட் என்று வந்து விட்டால் அத்தனையையும் மறந்து பின்னாடியே போய் விடுகிறார்கள் பலர். இதில் வயது வித்தியாசம் இல்லை. 6 முதல் 60 வரை அத்தனை பேருமே கிரிக்கெட்டை தீவிரமாக ரசிப்பவர்களாக உள்ளது ஆச்சரியமானது.
ஐபிஎல் பைனல் போட்டி பக்காவாக பிக்சிங் செய்யப்பட்டது.. 'ஆதாரங்களை' அடுக்கும் நெட்டிசன்கள்!
திரில் வெற்றி
அந்த வகையில் நேற்று ஹைதராபாத் நகரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்தது. கடைசி பந்து வரை படு விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் மும்பை ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியைச் சுவைத்தது. சென்னை தோற்றது.
அதிர்ச்சி
இது சென்னை ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்து விட்டது. கடைசி வரை சென்னையே வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படிப் போய் தோத்துட்டாங்களே என்று ரசிகர்கள் அதிர்ச்சியாகி விட்டனர். அதை இந்த வீடியோவில் பாருங்கள்.. எந்த அளவுக்கு அவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் என்பதை புரிந்து கொள்ளலாம்.
குட்டிப்பையன்
இந்தக் குட்டிப் பையன் சென்னையின் தீவிர ரசிகன் போல. அப்படித்தான் தெரிகிறது. தோனி அவுட்டானது அவன் எதிர்பார்க்கவில்லை, பிடிக்கவும் இல்லை. அவ்வளவுதான் பிழியப் பிழிய அழறான். தோனி அவுட்டே இல்லை.. சனியன் பிடிச்சவன்.. 3வது அம்பயர் தூக்குப் போட்டு செத்துரணும் என்றும் கோபமாக நடுவரை சபிக்கிறான். அந்த அளவுக்கு இந்த அவுட் அவனை பாதித்து விட்டது போல.
வீடியோ
அவனது அம்மா அப்படி சமாதானப்படுத்துகிறார். ஆனாலும் அவனுக்கு மனசு ஆறவில்லை. இப்படியும் ரசிகர்களா.. என்னடா தம்பிகளா இப்படி ஆயிட்டீங்களேடா!