பழங்கால கட்டிடங்கள் புனரமைக்கும் பணி... 2 காளைகளை வாங்கிய பொதுப்பணித்துறை
Recommended Video
சென்னை: சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள ஹுமாயூன் மஹாலை புனரமைப்பதற்காக பொதுப்பணித்துறை சார்பில் 2 காங்கேயம் காளைகள் வாங்கப்பட்டுள்ளன.
சுமார் 250 ஆண்டுகள் பழமையுடைய ஹூமாயூன் மஹால் முழுக்க முழுக்க சுண்ணாம்பைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த கட்டிடத்தை புனரமைப்பதற்காக சுண்ணாம்பு கலவை தயார் செய்யப்பட்டு அதன் மூலம் பூச்சு வேலைகள் நடந்து வருகின்றன.
மன்னார்குடி உறவுகளை ஒன்றிணைக்கும் திருமணம்... சமாதானம் செய்து வைப்பாரா சசிகலா?
அரசு நிதி ஒதுக்கீடு
தமிழகத்தில் உள்ள பாரம்பரிய பழமையான கட்டிடங்களை சீரமைப்பதற்கான பணிகளுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து பொதுப்பணித்துறை மூலம் அந்த பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில் சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள மிகப் பழமைவாய்ந்த கட்டிடமான ஹூமாயூன் மஹால் ரூ.36 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டு வருகிறது.
2 காளைகள்
ஹூமாயூன் மஹால் சுண்ணாம்புக் கலவையை கொண்டு கட்டப்பட்டுள்ளதால், மீண்டும் சுண்ணாம்புக் கலவையை கொண்டே அதனை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர். அதற்காக அவர்கள் 2 காங்கேயம் காளைகளை வாங்கி சுண்ணாம்பு கலவையை தயார் செய்கின்றனர். நாளொன்றுக்கு மாடுகளை பயன்படுத்தி 5 மூட்டைகள் வரை சுண்ணாம்புக் கலவை தயாரிக்கப்படுகிறது.
ஆள் நியமனம்
சுண்ணாம்பு கலவையை தயாரிக்க எழிலகம் வளாகத்திலேயே செக்கு போன்ற அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டு அதில் மாடுகள் வளைய வருமாறு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு காளைகளையும் நிர்வகித்து அதனை பராமரிக்க ஒருவரையும் பணிக்கு அமர்த்தியுள்ளது பொதுப்பணித்துறை.
பழங்கால முறை
சென்னை எழிலகம் வளாகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களும், அங்கு பணி நிமித்தமாக வருபவர்களும் இந்த நடைமுறையை ஆர்வமுடன் கண்டு ரசிப்பது குறிப்பிடத்தக்கது. பழங்கால முறையை பயன்படுத்தி சீரமைப்பு பணிகள் செய்வதை பார்வையிடுவது அவர்களுக்கு புதிய அனுபவத்தையும் தருகிறது.