மேடையை விட்டு இறங்கியபோது செல்போனில் கருணாநிதி சிலையை போட்டோ எடுத்த ராகுல் காந்தி!
Recommended Video
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திறக்கப்பட்ட கருணாநிதி சிலை, திமுக தொண்டர்களை மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராகுல் காந்தியையும் வெகுவாக கவர்ந்துவிட்டது.
அண்ணா அறிவாலயத்தில் இன்று கருணாநிதி சிலையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, பொத்தானை அழுத்தி வைத்து திறந்து வைத்தார்.
இதையடுத்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு அனைத்து தலைவர்களும் கிளம்பிச் சென்றனர்.
அப்போது மேடையிலிருந்து கீழே இறங்கக் கூடிய தருணத்தில் ராகுல்காந்தி தன்னிடம் இருந்த செல்போனை எடுத்து கருணாநிதியின் சிலையை போட்டோ பிடித்துக் கொண்டார்.
அண்ணா அறிவாலயத்தில், நம் தலைவர் கலைஞர் தன் அண்ணனுக்கு அருகில் சிலையாக எழுகிறார்! #StatueOfKalaingar https://t.co/lMgBAszS5R
— M.K.Stalin (@mkstalin) December 16, 2018
இதன் பிறகு தனது தாயார் சோனியா காந்தியுடன் மெரினா சென்று கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். ராகுல் காந்தியின் இந்த செயல் திமுக தொண்டர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. கருணாநிதியின் சிலையை பார்த்து ராகுல்காந்தி வியப்படைந்ததன் காரணமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பார் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.