பெரும் முறைகேடு.. நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக ஐடி ரெய்டு.. ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல்!
தமிழகம் முழுக்க தனியார் பள்ளி, நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.
சென்னை: தமிழகம் முழுக்க தனியார் பள்ளி, நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.
நன்றாக சென்று கொண்டு இருந்த மருத்துவ சேர்க்கையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதில் இருந்தே பிரச்னைகள்தான் நடந்து வருகிறது. ஏழை மாணவர்கள் ஏற்கனவே நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறது.
இன்னொரு பக்கம் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் பெரிய பூதாகரமாகி உள்ளது. இந்த மோசடி தொடர்பாக இதுவரை 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ள சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடல்.. இது என்னுடைய ஆத்ம உலகம்.. மாமல்லபுரம் குறித்து கவிதை எழுதிய பிரதமர் மோடி.. உருக்கம்!
சோதனை
அதே சமயம் இன்னொரு பக்கம் தமிழகம் முழுக்க தனியார் பள்ளி, நீட் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, கரூர், கோவை, திருப்பூர் என்று பல இடங்களில் இதற்காக சோதனை நடந்து வருகிறது. சுமார் 17 இடங்களில் இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
ஏன் இப்படி
தனியார் நீட் பயிற்சி மையங்களில் அதிக ஊதியத்திற்கு ஆசிரியர்களை நியமித்தது, மாணவர்களிடம் அதிகம் பணம் வாங்கியது, கருப்பு பண புழக்கம் என்று பல மோசடிகள் நீட் தேர்வுக்கு பின் நடந்துள்ளது. இதில் பல பயிற்சி நிறுவனங்கள் ஒரு ரூபாய் கூட வரி கட்டவில்லை, பயிற்சி நடத்தவும் அனுமதி பெறவில்லை என்கிறார்கள்.
இதனால் சோதனை
இதனால் தனியார் பள்ளி, நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. முக்கியமாக நாமக்கல்லில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனை நடந்து வருகிறது. நாமக்கல் க்ரீன் பார்க் பள்ளி , மற்றும் நீட் பயிற்சி மையம் , மற்றும் அதன் தாளாளர் வீடுகளில் வருமான வரித்துறை அ திகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.
எப்படி
பள்ளி இயக்குநர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடக்கிறது. இதுவரை கணக்கில் வராத ரொக்கம் ரூ.150 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பல குழுக்களாக பிரிந்து சோதனை செய்து வருகிறார்கள்.