தாம்பரத்தில் இருந்து அதிக தென்மாவட்ட ரயில்கள்? 2 மணி நேரத்திற்கு முன்பே புறப்பட தயாராகுங்க!
Recommended Video
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பதில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென்மாவட்டத்தைச் சேர்ந்த கூடுதல் ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே பரிசீலித்து வருவதால் சென்னையின் அம்பத்தூர் மற்றும் திருவெற்றியூர் பகுதி மக்கள் பல மணி நேரத்திற்கு முன்பே கடும் போக்குவரத்து நெரிசலை சமாளித்து தாம்பரம் செல்ல தயாராக இருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
சென்னையை பற்றி சென்னை வாசிகளுக்கு அதிகம் சொல்லவேண்டியதில்லை. சென்னையின் மற்றாரு பெயராக கூட போக்குவரத்து நெரிசல் என்று கூறிவிடலாம். அந்த அளவுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரம் சென்னை.
தென்மாவட்டமக்கள் பலரும் சென்னையில் இருந்து தங்கள் ஊர்களுக்கு புறப்பட எழும்பூர் ரயில் நிலையத்தை தான் பயன்படுத்தி வருகிறார்கள். இது சென்னையின் மையப்பகுதியில் இருப்பதால் சென்னையின் வடக்கு தெற்கு, மேற்கு பகுதி மக்களுக்கு எளிமையாக உள்ளது.
தாம்பரம் ரயில் நிலையம்
இந்நிலையில் நெரிசல் மிகுந்த சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பதில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென்மாவட்டத்தைச் சேர்ந்த அதிக ரயில்களை இயக்கம் ரயில்வே பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அம்பத்தூர்வாசிகள்
இதனால் சென்னை அம்பத்தூர், எண்ணூர், ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பயணிகள், ரயில் புறப்பட சில மணிநேரங்களுக்கு முன்பே பல கிலோமீட்டர் தூரம் பயணித்து தாம்பரம் சென்று தங்கள் ஊருக்ககான ரயில்களை பிடிக்க வேண்டிய நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசல் ஊரறிந்த விஷயம் என்கிற நிலையில், அதி தென் மாவட்ட ரயில்களை எக்மோரில் இருந்து தாம்பரத்திற்கு மாற்றுவது என்பது நிச்சயம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
பொதிகை எக்ஸ்பிரஸ்
தெற்கு ரயில்வே நிர்வாகம் தாம்பரத்தில் இருந்து அதிக ரயில்களை இயக்க விரும்புகிறது. ஏனெனில் தற்போது சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயில்களை கடற்கரை மற்றும் எக்மோர் வழியாக தெற்கு நகரங்களுக்கு இயக்கி வருகிறது. இதேபோல் வட மாநிலங்களுக்கு எழும்பூரில் இருந்து பீச் வழியாக இயக்கி வருகிறது.
லோக்கல் ரயில்
ரயில்வே ஒருவேளை தாம்பரத்திற்கு தென்மாவட்ட ரயில்களை மாற்றினால், தாம்பரத்திற்கு அதிக லோக்கல் ரயில்களை திருவள்ளூர், பீச் வழியாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வடமாநிலங்களுக்கு
தெற்கு ரயில்வே நிர்வாகம் தாம்பரத்தில் இருநது அதிக ரயில்களை இயக்க விரும்புகிறது. ஏனெனில் தற்போது சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயில்களை கடற்கரை மற்றும் எக்மோர் வழியாக தெற்கு நகரங்களுக்கு இயக்கி வருகிறது. இதேபோல் வட மாநிலங்களுக்கு எழும்பூரில் இருந்து பீச் வழியாக இயக்கி வருகிறது.
தாம்பரம் சாய்ஸ்
இனிமேல் புதிய ரயில்களை எக்மோரில் இருந்து இயக்குவது சாத்தியம் இல்லை என்ற நிலை உள்ளது. மேலும் எக்மோர் ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்வது என்பது சாத்தியம் இல்லை என்ற நிலை உள்ளது. எனவே இனி தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்றால் தாம்பரத்தில் இருந்து தான் இயக்க வேண்டிய நிலை உள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையில் தான் தாம்பரத்திற்கு கூடுதல் லோக்கல் ரயில்களை இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.