ஜில்லானது சென்னை....எங்கும் பரவலாக மழை...மக்கள் மகிழ்ச்சி!!
சென்னை: சென்னையை அடுத்த ஆவடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. திருமுல்லைவாயல், பட்டாபிராம், அம்பத்தூர் மற்றும் அயப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடந்த சில மணி நேரங்களாக மழை பெய்து வருகிறது.
சென்னைக்கு இன்று மழை வரலாமா என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் இன்று மதியத்திற்கு மேல் சென்னையின் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
இன்று முதல் வரும் ஒன்பதாம் தேதி வரை மழை பெய்வதற்கான காற்று வீசி வருவதாக தமிழ்நாடு வெதர்மேனும் தெரிவித்து இருந்தார். குறிப்பாக காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் சென்னையின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
சேற்றில்...பசு சாணத்தில் பிறந்தவள்...எனக்கு கொரோனா வராது...பெண் அமைச்சர் நம்பிக்கை!!
இத்துடன் அடுத்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, தர்மபுரி, சேலம், கடலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் தேவலாவில் 18 செ.மீ, ஆலங்குடியில் 12 செ.மீ, பேச்சிப்பாறையில் 9 செ.மீ, கிருஷ்ணராயபுரத்தில் 8 செ.மீ, கரூர், காய்கேயம், சோலையார் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ, வால்பாறை, சூரலாக்கோடுவில் தலா 6 செ.மீ மழையும், காமாட்சிபுரம், அன்னவாசலில் தலா 5 செ.மீ மழையும் பெய்துள்ளது.