இப்போதைக்கு வடகிழக்கு பருவமழை முடியாது.. இனியும் மழை இருக்கு.. வானிலை மையம் நல்ல செய்தி!
தமிழகம், புதுச்சேரியில் ஜனவரி 5 ம் தேதி வரை வடகிழக்கு பருவ மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் ஜனவரி 5 ம் தேதி வரை வடகிழக்கு பருவ மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வருடம் முழுக்க நன்றாக மழை பெய்தது. முக்கியமாக வடகிழக்கு பருவமழை நன்றாக மழை பெய்தது. சென்னையில் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக நவம்பர் மாதம் நன்றாக மழை பெய்தது. நவம்பர் தொடக்கத்தில் இருந்து டிசம்பர் பாதி வரை தமிழகத்தில் நன்றாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
செம.. சென்னைக்கு வருடத்தின் முதல் நாளே சூப்பர் லக்.. நல்ல மழை.. 2020 விளையாடிய மழை!
நேற்று எப்படி
நேற்று இரவும், இன்றும் கூட சென்னை மற்றும் வடமாவட்டங்களில் காலையில் மழை பெய்தது. சென்னையில் தற்போதும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் நிலை
தமிழகத்தில் இப்போதைக்கு வடகிழக்கு பருவமழை மஜூடிய வாய்ப்பில்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் தெரிவித்த அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்.
மழை வாய்ப்பில்லை
இப்போதைக்கு மழை நிற்க வாய்ப்பில்லை. கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் தமிழகத்தில் சந்திப்பதால் மழை பெய்கிறது. இதனால் வடக்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை எப்படி இருக்கும்
தமிழகம், புதுச்சேரியில் ஜனவரி 5 ம் தேதி வரை வடகிழக்கு பருவ மழை தொடரும்.சென்னை, புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று இரவு சென்னையில் கனமழை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை தெரிவித்துள்ளது.