ஒரு நாளுக்கே தாங்க முடியலை..சென்னையில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்.. நார்வே நாட்டு நற்செய்தி!
Recommended Video
சென்னை: சென்னையில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்னும் ஒரு வாரத்துக்கு மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி காட்சியளித்தது.
இந்த நிலையில் இன்னும் இரு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அது போல் நார்வே வானிலை மையம் இன்னும் ஒரு வாரத்துக்கு மழை இருக்கும் என கூறியுள்ளது.
24ம் தேதி உருவாகுது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழகத்தில் ஒரு வாரம் பலத்த மழைக்கு வாய்ப்பு
ஞாயிற்றுக்கிழமை
இதுகுறித்து அந்த மையம் கூறுகையில் நாளை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இதையடுத்து சனிக்கிழமை நண்பகல் முதல் மழை பெய்யும். பின்னர் இந்த மழை ஞாயிற்றுக்கிழமையும் தொடரும்.
கனமழை
திங்கள்கிழமை செப்டம்பர் 23-ஆம் தேதியும் பகல் வேளையில் மழை பெய்யும். செவ்வாய்க்கிழமையும் இதே நிலைதான் நீடிக்கும். ஆனால் செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை 5 மணி முதல் பகல் 11 மணி வரை கனமழை பெய்யும்.
நல்ல மழை
பின்னர் அந்த நாள் முழுவதும் நீடிக்கும் மிதமான மழை, புதன்கிழமை முழுவதும் இருக்கும். பின்னர் வியாழக்கிழமையும் மழை பெய்யும். வெயில், மழை ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் இருக்கும்.
நார்வே வானிலை மையம்
வெள்ளிக்கிழமை செப்டம்பர் 27-ஆம் தேதியும் மிதமான மழை பெய்யும். பின்னர் வெயில் வரும். இதையடுத்து சனிக்கிழமையன்றும் மழையும் வெயிலும் இருக்கும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.