சென்னையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கும் மழை... என்ன காரணம்!!
சென்னை: சென்னை வளசரவாக்கம், போரூர், ராமாபுரம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் திடீரென கனமழை பெய்து வருகிறது.
Recommended Video
சென்னையின் பல்வேறு இடங்களில் திடீரென தற்போது கன மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை ராஜஸ்தான் மாநிலத்தின் மேற்குப் பகுதிகள் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வாபஸ் பெற்றுள்ளது. இதனால், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்- ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
இந்த நிலையில், சென்னையில் இடியுடன் கன மழை பெய்து வருகிறது. சென்னையின் வளசரவாக்கம், போரூர், ராமாபுரம், விருகம்பாக்கம், மந்தைவெளி ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது.
காற்றின் திசை மாறி இருப்பதால் தமிழகத்தின் டெல்டா பகுதிகளான கடலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிபேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய இடங்களில் மழை பெய்யும் என்று நேற்று தமிழ்நாடு வெதர்மேன் பதிவு செய்து இருந்தார். அதன்படி சில இடங்களில் இன்று மழை பெய்து வருகிறது.