இனிமே எதிர்பார்க்க முடியாது.. தமிழகத்தில் திடீரென்று மாறிய வானிலை.. வெதர் ரிப்போர்ட் சொல்வது என்ன?
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவ வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவ வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தீவிரமாக மழை பெய்து வந்தது. அதிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் மிக தீவிரமாக கனமழை பெய்தது.
வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதனால் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என்று தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்தது.
இடுக்கி நிலச்சரிவு.. மூணாறில் தொடரும் சோகம்.. மேலும் 2 உடல்கள் மீட்பு.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு!
சென்னை மழை
அதிலும் நேற்று சென்னையில் இரவு முழுக்க நல்ல மழை பெய்தது. நேற்று சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சோழவரம், தாம்பரம், குரோம்பேட்டை, வேளச்சேரி, எழும்பூர், அண்ணா சாலை, வடபழனி, சைதாப்பேட்டை, தி நகர், கோயம்பேடு, அடையாறு, அண்ணா நகர் ஆகிய இடங்களில் மழை பெய்தது. தொடர்ந்து விடாமல் 2 மணி நேரம் மழை பெய்தது.
மழை குறையும்
இந்த நிலையில் இனி தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தென்மேற்கு பருவமழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவ வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிலும் சென்னையில் 35 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை வரை நிலவ வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
நீலகிரி எப்படி
அதேபோல் நீலகிரியில் மழை குறையும் என்று கூறப்பட்டுள்ளது. நீலகிரியில் கடந்த 10 நாட்களாக தீவிரமாக மழை பெய்தது. இதனால் நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலையில் இனி வரும் நாட்களில் படிப்படியாக நீலகிரியில் மழை குறையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்பு மலை பகுதியில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஆனால் என்ன
ஆனால் எப்போதும் போல கடல் பகுதியில் தீவிரமாக காற்று வீசும். வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் தீவிரமாக காற்று வீசும். மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்தக்காற்று வீசக்கூடும். ஆகவே மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்ல கூடாது. அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல கூடாது என்று வானிலை மையம் கூறியுள்ளது.