இரண்டு நாள்களுக்கு மழை... 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் - வானிலை தகவல்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என என சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்காலில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் அபரிமிதமான அளவு மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 6 செமீ அளவு மழை பதிவாகியுள்ளது. குமரி மாவட்டத்தில் சித்தார் பகுதியில் 4 செமீ மழையும் பெருஞ்சாணி,புத்தன் அணை ஆகிய தலா 3 செமீ மழையும் பதிவாகியுள்ளது. பெரியாறு, பேச்சிப்பாறை,நாகர்கோயில், வால்பாறை, குழித்துறை கூடலூர் சின்னக்கல்லார்,சுரலாக்கோடு ஆகிய பகுதிகளில் தலா 2 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் பதிவாகும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகக்கூடும்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிந்தது - இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் .
மத்திய கிழக்கு, வட கிழக்கு , தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் கடலோர பகுதிகளிலும், தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்திலும் இரு தினங்களுக்கு வீசக்கூடும் . மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.