காலை முதல் செம மழை.. குளுகுளு சென்னை
Recommended Video
சென்னை: சென்னையில் இன்று காலை முதல் பரவலாக பல இடங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காற்று மேல் அடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.
இதற்கேற்ப இன்று காலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை கொட்டி வருகிறது.
பள்ளிக்கரணை, கீழ்கட்டளை, பெரும்பாக்கம், கிண்டி, மாம்பலம், அசோக் நகர், வேளச்சேரி, அரும்பாக்கம், புரசைவாக்கம், எழும்பூர், மடிப்பாக்கம், வேப்பேரி, கோயம்பேடு, அண்ணாசாலை, வடபழனி, சூளைமேடு, ராமாபுரம், கோடம்பாக்கம், பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம், கேகே நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நல்ல மழைப்பதிவு இருந்தது.
Wow!!! Rains lashing in pallikkarnai... Awesome enjoying the rain.... @praddy06 @ChennaiRains @RainStorm_TN @chennaiweather @ pic.twitter.com/bRp5Vgjk8S
— Ajju (@Ajjubond) September 25, 2019
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. கர்நாடக தலைநகர் பெங்களூரை பொருத்தளவில் நேற்று இரவு முதல் அவ்வப்போது, நல்ல மழை பெய்தபடி உள்ளது. இன்று காலை முதல் வானம் ஓரளவு சூரிய வெளிச்சத்துடன் காணப்பட்டாலும் கூட, அவ்வப்போது தூரல் இருக்கிறது.