ஆஹா.. சென்னையில் என்ன ஒரு அருமையான கிளைமேட்.. பரவலான மழையால் நெகிழும் மக்கள்!
Recommended Video
சென்னை: சென்னையில் இன்று என்ன ஒரு அழகான காலை பொழுது... இதமான காற்று லேசான சாரல் மழை, மூடிய மேகங்கள் என மொத்த சென்னையும் இதமாக காணப்படுகிறது.
கடந்த திங்கள்கிழமை இரவு சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. மேலும் சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்தது. இந்த மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் மழை நீர் வெளியே போக வழியில்லாம் அடைத்து கொண்டு சாலைகளில் தேங்கி நின்றது.
ஒரு நாள் மழைக்கே சென்னை பல இடங்களில் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இந்த சூழலில் நேற்று இரவு சென்னையில் பரவலாக மழை பெய்தது. நேற்று பகலிலும் வெயில் பெரிதாக இல்லை. சென்னையில் அடுத்த 3 நாள்களுக்கு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்து இருந்தது.
"இதுக்குதான் பணம் தந்தியாண்ணா".. தூக்கில் தொங்கிய குடும்பம்.. கதறி அழுத சாந்தி.. திருப்பூரில் சோகம்
இந்நிலையில் இன்று விடிந்த காலைப்பொழுது சென்னைவாசிகளுக்கு நல்ல அற்புதமான காலைப்பொழுதாக இருந்தது. எப்போதும் சுட்டெரித்துக்கொண்டு உதிக்கும் சூரியன் மேகத்திற்கு நடுவே மறைந்து உதித்தது. இதனால் வெயில் இல்லை. குளிர்ந்த காற்று அடித்துக்கொண்டே இருந்தது.
அப்படியே தொடர்ந்து லேசான சாரல் மழை பல்வேறு இடங்களில் பெய்து வருகிறது. இதனால் சென்னைவாசிகள் என்ன ஒரு அருமையான கிளைமேட் என இதமான சூழலை அனுபவித்து வருகிறார்கள்.