அமைச்சராக நான் பேசியதில் என்ன தவறு.. ராஜேந்திர பாலாஜி "ஷாக்" கேள்வி
Recommended Video
சென்னை: கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என அமைச்சராக நான் பேசியதில் என்ன தவறு உள்ளது என ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் நேற்று முன் தினம் அரவக்குறிச்சியில் பிரசாரத்தில் கூறினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கமலுக்கு எதிராக இந்து அமைப்புகள் போர்க் கொடி உயர்த்தி உள்ளன. இந்த நிலையில் எப்போதும் கமலுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் ராஜேந்திர பாலாஜியிடம் கருத்து கேட்கப்பட்டது.
அப்போது அவர் விஷத்தை கக்கும் கமல்ஹாசனின் கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும் என தெரிவித்தார். இதற்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கமல் நாக்கை அறுப்பேன் என்பதா.. நீக்குங்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை.. மநீம கண்டனம்!
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில் நாக்கை அறுக்க வேண்டும் என அமைச்சராக நான் பேசியதில் என்ன தவறு.
தம்மை பதவி நீக்கச் சொல்ல கமல்ஹாசன் யார். தம்மை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் முதல்வருக்கு மட்டுமே உண்டு என்றார் ராஜேந்திர பாலாஜி.