உள்ளாட்சி தேர்தல்.. தனித்து போட்டியிட்டால் திராணி தெரியும்.. அதிமுக ரெடி.. ராஜேந்திர பாலாஜி
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட தயார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுகவுடன் பாஜக, பாமக, புதிய நீதி கட்சி, வாசனின் தமாகா, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. இதில் கூட்டணி கட்சிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களை வழங்கியது.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்படுகிறது. இதற்கான விருப்ப மனுக்களை அதிமுகவும் திமுகவும் பெற்று வருகின்றன.
இதுகுறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட தயார். உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டால் அனைத்து கட்சிகளின் திராணி தெரிந்துவிடும்.
வேறு பக்கம் வீசும் காற்று.. மோடியை இன்று சந்திக்கும் கிங் மேக்கர் சரத் பவார்.. சிவசேனா பேரதிர்ச்சி!
ரஜினியும் கமலும் ஒன்றிணைந்தாலும் அவரது ரசிகர்கள் ஒன்றிணைய மாட்டார்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தனர். தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் 3 மேயர் பதவிகளை கேட்டு வரும் சூழலில் ராஜேந்திர பாலாஜியின் கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.