ரஜினிகாந்தை விமர்சிப்பதா.. அவர் எவ்வளவு பெரிய ஆளுமை தெரியுமா.. மல்லுக்கு நிற்கும் எச்.ராஜா!
நடிகர் ரஜினிகாந்தை விமர்சிப்பது அநாகரீகமான விஷயம் என்று பாஜக தேசிய தலைவர் எச். ராஜா பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்தை விமர்சிப்பது அநாகரீகமான விஷயம் என்று பாஜக தேசிய தலைவர் எச். ராஜா பேட்டி அளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக இரண்டு வருடங்களுக்கு முன்பு அறிவித்தார். ஆனால் அதன்பின் அவர் அரசியல் தொடர்பாக எந்த விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ஆனால் அவ்வப்போது மத்திய அரசின் நடவடிக்கைகளை பாராட்டி, பாஜகவிற்கு ஆதரவாக பேசுவார். அதே போல் தமிழகத்திலும் அதிமுக ஆட்சிக்கு அவர் ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இதனால் அவர் அடிக்கடி விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார்.
இந்த நிலையில் ரஜினிகாந்தின் அரசியல் குறித்து பாஜக தேசிய தலைவர் எச். ராஜா பேட்டி அளித்துள்ளார். அதில், ரஜினிகாந்த் மிகப்பெரிய ஆளுமை. அவரை சிலர் தவறாக விமர்சித்து வருகிறார்கள். ரஜினியை விமர்சிப்பது அநாகரீகமான விஷயம்.
ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை. அவர் இன்னும் கட்சி தொடங்கவில்லை. அப்படி இருக்கும் போது அவரை தவறாக விமர்சிக்க கூடாது. அப்படி விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது.
வரிசையாக மோசடிகளை செய்த ப. சிதம்பரம் சிறையில் இருக்கிறார்கள். ப. சிதம்பரம் போலவே தமிழக எதிர்க்கட்சித் தலைவர் சிறை செல்வார். தவறு செய்தவர்கள் எல்லோரும் தண்டிக்கப்பட போகிறார்கள், என்று எச். ராஜா பேட்டி அளித்துள்ளார்.