காத்திருந்து பாருங்கள்.. ரஜினி சொன்ன பதிலால் மீண்டும் பரபரக்கும் போயஸ் கார்டன்.. சஸ்பென்ஸ்!
நேற்று போயஸ் கார்டன் குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் அளித்த பதில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: நேற்று போயஸ் கார்டன் குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் அளித்த பதில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முதல்நாள் இரவு அத்திவரதர் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவியுடன் சென்று வழிபாடு நடத்தினார். சென்னை திரும்பி வந்த அவர் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.
நேற்று மாலை செய்தியாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் பேசிய விஷயங்கள் எல்லாம் பெரிய வைரலானது. முக்கியமாக அவர் காஷ்மீர் விவகாரத்தில் தொடர்ந்து பாஜகவை ஆதரித்து பேசினார்.
என்ன சொன்னார்
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு சிறப்பாக செயல்பட்டது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மிகவும் சிறப்பாக ராஜ தந்திரத்துடன் செயல்பட்டனர். அவர்கள் காஷ்மீர் பிரச்சனையை மிகவும் சிறப்பாக கையாண்டு வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்று பாஜக உறுப்பினர் போலவே புகழ்ந்து தள்ளினார்.
வேறு என்ன சொன்னார்
இந்த நிலையில் செய்தியாளர் ஒருவர், ஒரு காலத்தில் போயஸ் கார்டன் தமிழக அரசியலில் மிக முக்கிய பங்கு வகித்தது. இப்போது அதன் பெருமையை இழந்துவிட்டது. மீண்டும் அது போல தமிழக அரசியலில் உங்களால் போயஸ் கார்டன் அரசியல் மையமாக மாறுமா என்று கேட்டார்.
என்ன பதில்
இதற்கு பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், இப்போது சொல்ல மாட்டேன்.. காத்திருந்து பாருங்கள் என்ன நடக்கும் என்று தெரியும், என்று குறிப்பிட்டார். எப்போதும் மழுப்பலாக பதில் சொல்லும் இவர் இந்த கேள்விக்கு மட்டும் கொஞ்சம் சஸ்பென்ஸ் வைத்து பதில் சொன்னார்.
திட்டம் என்ன
பாஜக - அதிமுக - ரஜினிகாந்த் ஆகியோரின் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில்தான் இருக்கிறது. அப்படி இருக்கும் நிலையில் இந்த கூட்டணி கண்டிப்பாக ஆட்சியை பிடிக்கும் என்று அதிமுக தலைவர்கள் சிலர் ரஜினியிடம் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் எதிர்க்கட்சியாக பொறுப்பேற்க வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளனர்.
போயஸ்
இதனால் ரஜினி முதல்வராகவோ அல்லது எதிர்கட்சித் தலைவராகவோ கண்டிப்பாக பதவி ஏற்க வாய்ப்புள்ளது என்று ரஜினி நினைக்கிறார். இதனால் மீண்டும் போயஸ் கார்டன் தமிழக அரசியலில் மிக முக்கியமான அங்கமாக மாறிப்போகும். ஆனால் இதெல்லாம் நடக்க வேண்டும் என்றால் அவர்வேறு விஷயம் செய்ய வேண்டும்... வேறு என்ன.. முதலில் அவர் கட்சி தொடங்க வேண்டும்!