சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சபாஷ்.. பாஜகவுக்கு ஒரு செம சப்போர்ட்டர் கிடைத்து விட்டார்.. ரஜினியை முழுசா பயன்படுத்தலாம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சிஏஏ சட்டத்தால் முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை - ரஜினி கருத்து

    சென்னை: சென்னை போயஸ் தோட்டத்தில் சாலையில் நின்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசுகையில் பாஜக கூட மக்களிடம் எளிதாக தங்களது கருத்தை பரப்ப முடியாத நிலையில் அதை அவர் கனகச்சிதமாக செய்துள்ளார்.

    நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து போராட்டங்கள் சூடு பிடித்து வருகிறது. இந்தச் சட்டத்தை எதிர்த்து மக்கள், மாணவர்கள், எதிர்க்கட்சிகள் என போராடி வருகின்றனர். இந்த சட்டத்தால் இந்தியாவில் வாழும் முஸ்லீம்களுக்கோ வேறு குடிமக்களுக்கோ எந்த வித பாதிப்பும் ஏற்படாது என மத்திய அமைச்சர் அமித்ஷாவும், பிரதமர் மோடியும் தெளிவுப்படுத்தினர்.

    ஆனால் அதை யாரும் ஏற்பதாக இல்லை. ரஜினி எப்போது அரசியலுக்கு வருகிறேன் என சொன்னாரோ அன்றிலிருந்து தமிழக அரசு திட்டங்களாக இருந்தாலும் சரி மத்திய அரசின் சட்ட திட்டங்களாக இருந்தாலும் சரி அதில் ரஜினியின் கருத்து என்ன என்பதை கேட்க அனைவருக்குமே ஆவல் அதிகம்தான்.

     Rajinikanth: Rajinikanth: "கந்து வட்டி" ரஜினி.. என்ஆர்சி விவகாரத்தை திசை திருப்புகிறார்.. தமிமுன் அன்சாரி விளாசல்

    சிஏஏ

    சிஏஏ

    அந்த வகையில் ரஜினி வாய்திறக்கவில்லையே என இருந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி கொடுத்தார். அவர் கூறுகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் உள்ள மக்களுக்கு பிரச்சினை இல்லை என தெளிவாக கூறிவிட்டார்கள். என்பிஆர் அவசியம்தான். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும்.

    என்ஆர்சி

    என்ஆர்சி

    சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றால் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என பீதி கிளப்புகிறார்கள். அரசியல் கட்சிகள் சுயலாபத்திற்காக தூண்டி விடுகிறார்கள்; குறிப்பாக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கும்போது தீர ஆராய்ந்து இறங்குங்கள் என்றார். அது போல் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை தரப்பட வேண்டும் என்றும் ரஜினி காந்த் தெரிவித்தார்.

    உணர்த்திய ரஜினி

    உணர்த்திய ரஜினி

    எப்போதும் சற்று மழுப்பலான பதில்களை கொடுத்து வரும் ரஜினி காந்த் இந்த முறை மிகவும் தெளிவாக பேசியுள்ளார். அதாவது பாஜக ஆதரவாளர் போல் பேசியுள்ளார். தமிழகத்தில் எப்படியாவது கால் பதிக்க வேண்டும் என பாஜக கங்கணம் கட்டியுள்ளனர். இந்த நிலையில் தங்களது நிலைப்பாட்டை ரஜினியை விட யாராலும் தெளிவாக சொல்ல முடியாது என்பதை அவரே உணர்த்திவிட்டார். இனி ரஜினியை பாஜக இது போன்ற விஷயத்துக்கு பயன்படுத்தலாம்.

    திட்டங்கள்

    திட்டங்கள்

    சுருக்கமாக சொல்ல போனால், பாஜகவுக்கு நல்ல ஒரு ஆதரவாளர் கிடைத்து விட்டார் என்று சொல்லலாம். பாஜகவால் கூட தங்கள் கருத்தை இத்தனை எளிதாக பரப்ப முடியாது. அந்த வேலையை ரஜினி காந்த் சுலபமாக்கிவிட்டார். முஸ்லீம்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நானே வந்து குரல் கொடுப்பேன் என கூறியுள்ள ரஜினி இதுவரை நீட், ஹைட்ரோகார்பன் திட்டம் உள்ளிட்ட எத்தனை திட்டங்களுக்கு குரல் கொடுத்துள்ளார் என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.

    English summary
    Actor Rajinikanth becomes a super supporter for BJP in CAA, NRC and NPR.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X