"தலைவா நீ வர வேண்டும்"... "முத்து" வீட்டின் முன்பு பத்து ரசிகர்கள் கூடி உண்ணாவிரதம்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வீட்டு முன்பாக அவரது ரசிகர்கள் உன்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ரஜினிகாந்தை எப்படியும் அரசியலுக்கு வர வைப்போம் என்பது ரசிகர்களின் கருத்து.
உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரப் போவதில்லை என்பதை சூசகமாக அறிவித்திருந்தார் நடிகர் ரஜினிகாந்த். இதனால் ரஜினி ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
ஒருபக்கம் அரசியல் கட்சிகள், ரஜினி அரசியலுக்கு வரவே போவதில்லை என மகிழ்ந்து கொண்டாடுகின்றார். இன்னொரு பக்கமோ ரஜினி ரசிகர்கள் எப்படியாவது தலைவரை அரசியலில் இழுத்துவிட்டாக வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றனர்.
திமுகவுக்கு நேரடி சவால்.. அறிவாலயத்திற்கு எதிரே ரஜினி போஸ்டர்.. பரபரக்கும் அண்ணா சாலை!
இதன் ஒருபகுதியாக சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீடு முன்பாக 10 ரசிகர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். உண்ணாவிரதம் இருந்தாவது எங்கள் தலைவரை எப்படியாவது அரசியலுக்கு கொண்டு வந்துவிடுவோம் என நம்பிக்கையுடன் உண்ணாவிரதப் போராட்டத்தை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.