நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்.. ரஜினியின் வருகை குறித்து பொன் ராதாகிருஷ்ணன்
சென்னை: ரஜினிகாந்த் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக யூகங்கள் கிளம்பி 25 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ரஜினி காந்த் அரசியல்கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். வரும் 2021 ஜனவரியில் கட்சி தொடங்குவதை அதிகாரப்பூர்வமாக இன்றைக்கு அறிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் ஊழல் அற்ற ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியலை விரும்புவதாக முன்பு கூறியிருந்தார். அதன்படி தான் புதிய கட்சி தொடங்கப்போவதாக இன்று அறிவிதுள்ளார். ரஜினியின் அரசியல் வருகை குறித்து பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பிரபல தனியார் தொலைக்காட்சி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழக அரசியல் எப்படிபட்ட சூழ்நிலையில் இருக்கிறது என்பதை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் நேர்மையானவர்கள் அரசியலுக்கு வருவது ஏற்கக்கூடியது.
ஒருபக்கம் ரஜினி.. இன்னொருபக்கம் அழகிரி, பாமக, அதிமுக.. திமுகவிற்கு எதிராக வகுக்கப்படும் சக்ர வியூகம்
சூப்பர் ஸ்டாராக மக்கள் அறியக்கூடிய ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருப்பதற்கு மனபூர்வமான வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன். மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.