கட்சி தொடங்குவது எப்போது.. ரஜினி அளித்த பரபரப்பு பதில்
Recommended Video
சென்னை: கட்சியை எப்போது தொடங்குவீர்கள் என ரஜினிகாந்திடம் கேட்டதற்கு அவர் இப்போது என்ன அவசரம் என கேட்டுள்ளார்.
சென்னையில் போயஸ் தோட்டத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கட்சி தொடங்குவது எப்போது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ரஜினி கூறுகையில் சட்டசபை தேர்தல் வர இன்னும் அதிக நேரம் இருக்கிறது என தெரிவித்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசினார்.
அப்போது நான் அரசியலுக்கு வருவது உறுதி. 234 தொகுதிகளிலும் நாம் போட்டியிடுகிறோம். கட்சி தொடங்குவதற்கான எல்லா வேலைகளும் முடிந்துவிட்டன. இனி அம்பு விடுவதுதான் பாக்கி என அறிவித்திருந்தார்.
ரஜினி கிண்டும் அரசியல் உப்புமா.. வீட்டு வாசலை தாண்டாத "சூப்பர் அரசியல்".. பின்னணியில் பலே திட்டங்கள்
இதனால் ரஜினி ரசிகர்கள் எப்போது எப்போது என ஆவலுடன் இருந்தனர். இந்த நிலையில் லோக்சபா தேர்தல், சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ரஜினி கட்சி தொடங்க இன்னும் இரு ஆண்டுகள் ஆகும் என்ற தகவலால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.