#Petta எக்ஸ்ட்ரா பேச்சை தவிர்த்தால் நல்லா இருக்கலாம் .. ரஜினி பலே அட்வைஸ்
சென்னை: எக்ஸ்ட்ரா பேச்சை தவிர்த்தால் நல்லா இருக்கலாம் என்று ரஜினிகாந்த் அறிவுரை வழங்கியுள்ளார்.
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சாய்ராம் பொறியியல் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு ரஜினிகாந்த் பேசினார்.
அவர் பேசுகையில் கார்த்திக் சுப்புராஜிடம் ஸ்டோரி டெல்லிங் ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. அது ஒரு திறமை. அசாதாரணமாக செய்கிறார். அதிகம் பேசக் கூடாது, அதிகம் சாப்பிடக் கூடாது, அதிகம் தூங்கக் கூடாது, அதிகம் திட்டக் கூடாது, அதிகம் அட்வைஸ் செய்யக் கூடாது. அதிகம் சிந்திக்க கூடாது, அதிகம் நடக்க கூடாது. எல்லாம் எக்ஸ்ட்ராவாக இருக்கக் கூடாது. இந்த எக்ஸ்ட்ராவில் நிறைய இருக்கு.
அனிருத் நம்ம குழந்தை. சின்ன வயதிலிருந்து பார்த்தது. அனிருத் இசை என்று சொன்னதும் சந்தோஷப்பட்டவன் நான்தான். இந்த அளவுக்கு சிந்ன வயதிலேயே இசையில் பிரபலமாகியிருப்பது அவரோட அப்பா ரவிச்சந்திரன், அம்மா லட்சுமி ஆகியோர்தான். "3" படத்தில் அனிருத் எப்டி என்று கேட்டபோது, அடுத்த ஏ.ஆர். ரஹ்மான் என்று அடையாளம் காட்டியவர் தனுஷ்.
பிறந்த நாள் வரப் போகிறது. நான் ஊரில் இருக்கமாட்டேன் என்று எல்லோருக்கும் தெரியும். ஏமாற வேண்டாம். கடந்த முறையும் ரசிகர்கள் வந்து ஏமார்ந்து சென்றனர். எனவே தப்பா நினைக்காதீங்க. இந்த முறையும் யாரும் வரவேண்டாம் என்றார் ரஜினி.