அதுதான் ரஜினி செய்யப்போகும் சிறப்பான தரமான சம்பவம்.. இதுஇல்ல.. 'வெயிட் அண்ட் சி'
Recommended Video
சென்னை: தலைவர் அரசியலுக்கு எப்போது நுழைவார் என்பதை அறிய ஆவலுடன் அவரது ரசிகர்கள் காத்திருக்கையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோ, சன் பிக்சர்ஸ் உடன் கைகோர்த்து புதிய படத்தில் நடித்து அதன் மூலம் சிறப்பான தரமான சம்பவங்களை செய்ய முடிவு செய்திருக்கிறார்.
பாட்ஷாவில் தொடங்கி பேட்டை வரை ஒவ்வொரு படத்திலும் சிறப்பான தரமான சம்பவங்களை ரஜினிகாந்த் நடிகராக செய்து வருகிறார். ஆனால் கையோடு அரசியல் தொடர்பான விடுகதைகளை சொல்லிவிடுகிறார்.
இதனால் ரஜினி ஒவ்வொரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகும் போதும் ரஜினி அரசியலை அறிவிப்பார் அறிவிப்பார் என்று எண்ணி காத்திருந்த ரசிகர்கள் கடைசியில் காலா படத்திற்கு முன்பு தான் ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை அறிந்து கொண்டனர்.
ரஜினி நடிக்கிறார்
ஆனால் ரஜினி அதற்கு பிறகு பேட்டை, தர்பார் என இரண்டு படங்களில் நடித்து விட்டார். அப்போது சன்பிக்சர்ஸ் உடன் இணைந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார்.
70வயதாகும் ரஜினி
இந்த படம் அடுத்த பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனது மூலம் 70வயதாகும் ரஜினி அரசியலுக்கு வருவது இன்னும் தாமதமாகி உள்ளது.
நேரடியாக தேர்தல்
ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. அவர் ரஜினி மக்கள் மன்றத்தை ஆரம்பித்தார். அதன்பிறகு கட்சி ஆரம்பிக்கும் வேலைகளில் இறங்கவில்லை. நேரடியாக 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களம் இறங்க முடிவு செய்திருக்கிறார்.
ரஜினிதான் சொல்லணும்
ஆனால் தமிழகத்தில் தேர்தல் வருவதற்கு இன்னும் 18 மாதங்களுக்கு மேல் உள்ளதால் .ரஜினி அதற்கு முன்னால் முழுநேர அரசியல்வாதியாவது எப்போது என்ற எதிர்பார்ப்பு ரஜினி மக்கள் மன்றத்தினர் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியிலும் எழுந்துள்ளது. அதற்கான விடையை ரஜியை தவிர வேறு யாரும் விடைஅளிக்க முடியாது.
வெயிட் பண்ணுங்க
அதுவரை ரஜினி அரசியலை பற்றி மட்டுமல்ல பொதுமக்களின் அன்றாட பிரச்சனைகள் தொடர்பாக கூட அரசியல்வாதியாக கருத்து சொல்வதற்கு கூட வாய்ப்பு இல்லை. காலாவில் சொன்னதை போல் ரஜினி. "வேங்க மகன் ஒத்தையில் நிக்கேன்.. இப்ப வாங்களே" என்று அரசியல்வாதிகளை அழைக்கும் நாள் தான் ரஜினி செய்ய போகும் சிறப்பான தரமான சம்பவம் ஆகும். அதற்கு காத்திருப்போம்.