நீங்கள் சொன்னா ஒட்டுமொத்த சினிமா இன்டஸ்ட்ரியே சொன்ன மாதிரி.. விநியோகஸ்தருக்கு நன்றி கூறிய ரஜினி!
சென்னை: பேட்ட படம் குறித்து விநியோகஸ்தர் அனுப்பிய வாட்ஸ் அப் வாழ்த்துச் செய்திக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி கூறி பதிலளித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட. இந்த படம் கடந்த 10-ஆம் தேதி வெளியானது. இந்த படத்தின் கதை கரு இல்லாவிட்டாலும் ரஜினி ரசிகர்களுக்கு பிடித்த படமாக அமைந்துள்ளதாக சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.
வாட்ஸ் ஆப் ஆடியோ
90 -களில் பார்த்த ரஜினியை தற்போது பேட்ட படம் மூலம் ரசிகர்கள் பார்ப்பதால் இந்த படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் ரஜினிகாந்துக்கு வாட்ஸ் ஆப் ஆடியோ மூலம்வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
|
வாழ்த்துகள் சார்
அதில் "சார் நான் திருப்பூர் சுப்பிரமணியன் பேசுறேன். பேட்ட ரொம்ப அருமையான படம். ஆடியன்ஸ் ரொம்ப நல்லா ரசிக்கிறாங்க. நல்ல ஒரு பெரிய ஹிட்டான படம். பொங்கலுக்கு ரொம்ப நல்ல படத்தை கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துகள் சார்" என்று கூறியுள்ளார்.
ஒட்டுமொத்த சினிமா இன்டஸ்ட்ரியே
அதற்கு ரஜினிகாந்தும் ஆடியோ பதிவில் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில் ரொம்ப நன்றி திருப்பூர் சுப்பிரமணியம் சார்.. (சிரிக்கிறார்) ரொம்ப நாளாச்சு. நீங்கள் சொன்னா ஒட்டுமொத்த சினிமா இன்டஸ்ட்ரியே சொன்ன மாதிரி.
நன்றி
ரொம்ப சந்தோஷம் உங்கள் வாயால் கேட்பதற்கு. ரொம்ப நன்றிங்க. தேங்கஸ் ஏ லாட்" என்று கூறியுள்ளார். இந்த ஆடியோ பதிவுகளை ரஜினி ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.