சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏற்கனவே மன்னிப்பு கேட்டவர்தான்.. ரஜினி மீண்டும் மன்னிப்பு கேட்பார்.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி!

நடிகர் ரஜினிகாந்த் உண்மை தெரிந்ததும் மன்னிப்பு கேட்பார் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ரஜினிகாந்த் பரபர பேட்டி

    சென்னை: நடிகர் ரஜினிகாந்த் உண்மை தெரிந்ததும் மன்னிப்பு கேட்பார் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது தொடர் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ராமருக்கு எதிராக பெரியார் பேரணி செய்தார். இதில் ராமருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. சீதை புகைப்படம் எடுத்து செல்லப்பட்டது, இது மிகவும் தவறு என்று ரஜினி குறிப்பிட்டார்.

    நடிகர் ரஜினி காந்த் பெரியார் குறித்த கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது.பெரியார் குறித்து நான் பேசியது தவறானது கிடையாது, என்றுள்ளார். அவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முக்கியமாக அரசியல்வாதிகள், திரை உலகினர், தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    உதயநிதி கருத்து

    உதயநிதி கருத்து

    இந்த நிலையில் நடிகர் ரஜினியின் கருத்து குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அரசியலுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்னும் முழுமையாக வரவில்லை. அவ்வப்போது அவர் தவறாக கருத்து தெரிவித்து வருகிறார். பெரியார் குறித்து ரஜினி பேசியதில் உண்மை கிடையாது.

    ரஜினி

    ரஜினி

    பெரியார் குறித்து நடிகர் ரஜினிக்கு ஒன்றும் தெரியவில்லை. உண்மை தெரியாமல் அவர் எதை எதையோ பேசுகிறார். அவர் தான் பேசியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    மன்னிப்பு

    மன்னிப்பு

    உண்மை தெரியாமல் பேசும் ரஜினி, தெரிந்த பிறகு மன்னிப்பு கேட்பார். அவர் ஏற்கனவே இப்படி மன்னிப்பு கேட்டு இருக்கிறார், காவிரி விவகாரம் குறித்து முன்பு தவறாக பேசினார். பின் அதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்டார். அதேபோல் மீண்டும் மன்னிப்பு கேட்பார்.

    முரசொலி கருத்து

    முன்னதாக முரசொலி குறித்த கருத்துக்கு உதயநிதி ஸ்டாலின் கடுமையாக பதில் அளித்து இருந்தார். அவர் தனது டிவிட்டில், முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு' என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். , என்று குறிப்பிட்டு இருந்தார்.

    English summary
    Rajinikanth will apologies for his comment on Periyar once he gets to know the truth says, Udhayanidhi Stalin.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X