தேர்தலில் போட்டியிட போகும் கமலுக்கு ரஜினி வாழ்த்து.. "நாளை நமதே".. கமல் நன்றி!
Recommended Video
சென்னை: தேர்தலில் முதல்முறையாக போட்டியிட போகும் கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்றும் பிற 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து தேர்வு நடைபெறுகிறது என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கமல்ஹாசன் கட்சி தொடங்கி ஓராண்டு முடிந்து இரண்டாவது ஆண்டு தொடக்கவிழா பொதுக் கூட்டம் இன்று நெல்லையில் நடைபெற்றது.
கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல்முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர்...என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
— Rajinikanth (@rajinikanth) February 24, 2019
இந்த நிலையில் ரஜினிகாந்த், கமலுக்கு டுவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார். அதில் அவர் கூறுகையில் கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல்முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர்...என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்... என தெரிவித்துள்ளார்.
நன்றி @rajinikanth, என் 40 ஆண்டு கால நண்பரே. நல்லவர் துணை நின்றால் நாற்பது எளிதே
— Kamal Haasan (@ikamalhaasan) February 24, 2019
நாளை நமதே.
இதற்கு கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் நன்றி @rajinikanth, என் 40 ஆண்டு கால நண்பரே. நல்லவர் துணை நின்றால் நாற்பது எளிதே , நாளை நமதே என தெரிவித்துள்ளார்.