1 மாதம் பரோல்.. வேலூர் சிறையிலிருந்து வெளியே வந்தார் பேரறிவாளன்!
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு இன்று ஒரு மாத பரோலில் வெளியே வந்துள்ளார்.
Recommended Video
சென்னை: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு இன்று ஒரு மாத பரோலில் வெளியே வந்துள்ளார்.
பேரறிவாளனின் அப்பாவின் உடல்நிலை கடந்த சில நாட்களாக மோசமாக இருக்கிறது. அவர்கள் கடந்த சில நாட்களாக தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரை காண வேண்டும் என்பதற்காக பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.
அவர் தனது தண்டனை காலத்தில் பெறும் இரண்டாவது பரோல் இது. இதற்கு முன் கடந்த 2017-ம் ஆண்டு பேரறிவாளனுக்கு இரண்டு மாத பரோல் வழங்கப்பட்டிருந்தது.
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார், பேரறிவாளன். சிறு வயதிலேயே கைது செய்யப்பட்ட இவர், பல ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். அவரது தூக்கு தண்டனை மட்டும் நீக்கப்பட்டுள்ளது. அவரது விடுதலைக்காக அவரின் தாய் அற்புதம்மாள் போராடி வருகிறார்.
இந்த நிலையில்தான் தற்போது சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாத கால பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனின் தந்தை குயில்தாசனின் உடல்நலத்தைக் காரணம் கட்டி பரோல் கேட்கப்பட்டது.
இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு மூலம் பேரறிவாளனுக்கு இந்தப் பரோல் வழங்கப்பட்டுள்ளது. பேரறிவாளனுக்கு வழங்கி உள்ளது. அவர் காலை 10.30 மணிக்கு பரோலில் வெளியே வந்தார்.
ஜெர்மனியின்.. செந்தேன் மலரே.. கடல் கடந்த காதல்.. கோவை பெண்ணை கரம் பிடித்த ஃபாரீன் மாப்பிள்ளை!