ஏன் கேட்கணும்.. வாயை விட்டு மாட்டிக்கணும்.. பற்றி எரியும் அந்த 10 பேர்!
ரஜினியின் 10 பேர் கேள்வி ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
Recommended Video
சென்னை: இப்போ ஊரெல்லாம் என்ன பேச்சு தெரியுமா? அந்த 10 பேரை பத்திதான்? எந்த 10 பேர் தெரிமா? ரஜினி சொன்ன அதே 10 பேர்தான்!!
செய்தியாளர்களிடம் ரஜினி பேசியபோது, "ஒருவரை 10 பேர் எதிர்த்தால் யார் பலசாலி?'' என்று எல்கேஜி பிள்ளைகளிடம் கேள்வி கேட்பது மாதிரி ரொம்ப கஷ்டமான கேள்வியை ரஜினி கேட்டார். சூசமாக சொல்கிறேன் என்ற பெயரில், மறைமுகமாக சொல்கிறேன் என்ற பெயரில், ஜாக்கிரதையாக சொல்கிறேன் என்ற பெயரில் கருத்து சொன்னார்.
என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போன்று, தானே வாயை கொடுத்து சிக்கி கொண்ட ரஜினியின் அந்த 10 பேர் பஞ்ச் வரிகளை வைத்துதான் நெட்டிசன்கள் ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள். "பலசாலி" என்ற வார்த்தை ட்ரெண்டாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து சில ட்வீட்கள் இதோ:
ரஃபேல்.. உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரான விமானப்படை அதிகாரிகளிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி
|
அப்ப நான்தான் பலசாலி
29a பேருந்தில் நான் உட்கார்ந்திருக்க, எனக்கு எதிரே 10பேர் நிக்குறாங்க. #பலசாலி
|
மாற்றிப் பேசவும் தைரியம் தேவை
கருணாநிதி, மூப்பனாருடன் சேர்ந்து 1996 தேர்தலில் 'பலசாலி' ஜெயலலிதாவை வீழ்த்திவிட்டு, 2004-ம் ஆண்டு ஜெயலலிதாவை 'தைரியலட்சுமி' என்றார் சூப்பர் ஸ்டார். ரஜினி 'பலசாலியா' என தெரியாது. ஆனால், கருத்துக்களை மாற்றிப் பேச 'தைரியம்' வேண்டும்.
|
அப்ப தீ பலசாலியா
தீயை அணைக்க ஊர் கூடினால் தீ பலசாலி என்று பொருளில்லை மிஸ்டர் சூப்பர்ஸ்டார்!--Vijayasankar Ramachandran
|
ஜெயிக்க முடியாது
ரஜினிகாந்த் யூடர்ன் போட்டு விட்டார். தனது பேச்சை தானே மறுத்துள்ளார். மாற்றி மாற்றிப் பேசுகிறார். நிலையான ஸ்திரமான நிலையில் அவர் இல்லை. அரசியலில் இப்படி மாற்றி மாற்றிப் பேசினால் வெற்றி பெற முடியாது.
ஏன் இப்படி
பேசாமல் ரஜினி செய்தியாளர்களிடம் அந்த கேள்வியை கேட்காமலேயே விட்டிருக்கலாம். அல்லது அந்த 10 பேர் யார் என்றாவது பகிரங்கமாக சொல்லி இருக்கலாம். அதுவும் இல்லையென்றால் அந்த பலசாலி யார் என்றாவது சொல்லி இருக்கலாம். 'பலசாலி' என்ற வீரமிக்க வார்த்தை கடைசியில் இப்போது நொந்து போய் பலமிழந்த வார்த்தையாகி விட்டது!! அது ஏன் அப்படி ஒரு கேள்வியை ரஜினி கேட்கணும், வாயை குடுத்து இப்படி மாட்டிக்கணும்?