கருணாநிதி சிலை திறப்பில் பங்கேற்றதை மிகப் பெரிய பெருமையாக கருதுகிறேன்- ரஜினிகாந்த்
சென்னை: கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்றதை மிகப் பெரிய பெருமையாக கருதுகிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தில் சிலை வைப்பதற்காக தயார் செய்யப்பட்டது. அத்துடன் அங்கு ஏற்கெனவே கருணாநிதியால் வைக்கப்பட்ட அண்ணா சிலையும் புனரமைக்கப்பட்டது.
இதையடுத்து இரு சிலைகளையும் இன்று அண்ணா அறிவாலயத்தில் சோனியாகாந்தி திறந்து வைத்தார். இந்த விழாவுக்கு 3 மாநில முதல்வர்கள் ஆந்திரம் சந்திரபாபு நாயுடு, கேரளம் பினராயி விஜயன், புதுவை நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் ரஜினிகாந்த், சத்ருஹன் சின்ஹா, வைரமுத்து, குஷ்பு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் ரஜினி கூறுகையில், கருணாநிதி சிலை திறப்பில் பங்கேற்றதை மிகப் பெரிய பெருமையாக கருதுகிறேன் என ரஜினிகாந்த் தெரிவித்தார்.
Comments
English summary
Rajinikanth says that its his pride to participate in Karunanidhi's statue opening ceremony.
Story first published: Sunday, December 16, 2018, 18:26 [IST]