நடு ராத்திரி.. வீட்டை நோக்கி ரஜினிகாந்த் கார்.. ஏர் போர்ட்டிலிருந்து.. விடாமல் துரத்தி வந்த இளைஞர்!
ரசிகருடன் ரஜினி போட்டோ எடுத்து கொண்டுள்ளார்
Recommended Video
சென்னை: நடுராத்திரி.. ரஜினியை இளைஞர் ஒருவர் பைக்கில் துரத்தி கொண்டே வந்துள்ளார்.. அவர் வேறு யாருமில்லை.. ரஜினியின் வெறித்தனமான ரசிகர் ஆவார்!
நேற்று முன்தினம் இரவு ரஜினி இமயமலை பயணத்தை முடித்து சென்னை திரும்பினார். அப்போது மணி 12.00க்கு மேல் ஆகிவிட்டது.
ஏர்போர்ட்டில் இருந்து ரஜினி காரில் ஏறி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஏர்போர்ட்டில் இருந்து பின்னாடியே பைக்கில் ஒருவர் ஃபாலோ பண்ணி கொண்டே வந்தார். ஆனால் தன்னை பைக்கில் ஒருவர் பின்தொடர்ந்து வருகிறார் என்பதை ரஜினி கவனிக்கவில்லை.
என்ன பொம்பளை புள்ளையா பெத்துட்டு இருக்கே.. 5-வதும் பொண்ணா? நீ வேணாம்.. முத்தலாக் சொன்ன கணவர்!
தீவிர ரசிகர்
அதனால், கார் போயஸ் கார்டனுக்கே வந்துவிட்டது. வீட்டுக்கு வந்ததும்தான் பைக்கில் ஒருவர் பின்தொடர்ந்து வந்ததை ரஜினி கவனித்தார். அவர் தீவிர ரசிகர் என்று தெரிந்து விட்டது. எனினும் வீட்டிற்குள் சென்றுவிட்டார் ரஜினி. அடுத்த ஒருசில செகண்டில் ரஜினி வீட்டு வாட்ச்மேன் ஓடிவந்து, "உங்களை சார் கூப்பிடுகிறார்" என்று சொல்லவும் குப்பென வியர்த்து விட்டது இளைஞருக்கு.
கண்டிப்பு
அதனால் பயந்தபடியே வீட்டுக்குள் சென்றார் ரசிகர். உடனே ரஜினியும் ரசிகரின் விருப்பப்படியே ஒரு போட்டோ எடுத்து கொண்டார். பிறகு, இப்படியெல்லாம் உயிரை பணயம் வைத்து பைக் ஓட்டக் கூடாது கண்ணா.. இப்படி காரையும் ஃபாலோ செய்யக்கூடாது என்று உரிமையாக கண்டித்தார்.
சாரி தலைவா
அதற்கு ரசிகரும், "ஸாரி தலைவா.. இனிமேல் செய்ய மாட்டேன்" என்று சொல்லி வெளியே வந்தார். இந்த ரசிகரின் நண்பர் இந்த செய்தியை தனது பேஸ்பக்கிலும் பகிர்ந்துள்ளார். இதற்கு ஏராளமானோர் லைக் செய்து வருகிறார்கள்.
சபாஷ் ரஜினி
ஒரு உச்ச நடிகர்.. நடுராத்திரி.. ஒரு ரசிகனை வீட்டுக்குள்ளே அழைத்து உபசரித்து.. போட்டோ எடுத்து.. அட்வைசும் தந்து அனுப்பி உள்ளது ரஜினி என்ற நல்ல மனிதனின் குணத்தைதான் காட்டுகிறது. இது போல நடிகர் அஜித்தும் பலமுறை பின் தொடர்ந்து வந்த ரசிகர்களுடன் போட்டோ எடுத்து அவர்களை செல்லமாக கண்டித்தும் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.