ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமார் இடமாற்றம்- புதிய எஸ்பியாக கார்த்திக் நியமனம்
சென்னை: தமிழகத்தில் ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமார் உள்ளிட்ட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் துணை கமிஷனர் செல்வகுமார், வேலூர் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் கொலை- மத மோதலை தூண்டும் எச்.ராஜா உட்பட பாஜகவினர் மீது நடவடிக்கை தேவை: கே.பாலகிருஷ்ணன்
பெரும் சிக்கலில் எச்.ராஜா.. முஸ்லீம்களை மத வெறியர்களாக சித்தரிப்பதா.. கடும் நடவடிக்கை எடுக்க புகார்
ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமார் மாற்றம்- முதல்வர் எடப்பாடியா? ஹெச் ராஜாவா? ஜவாஹிருல்லா கண்டனம்
வேலூர் எஸ்.பி.யாக இருந்த பிரவேஷ் குமார், சென்னை ரயில்வே எஸ்.பியாகவும், சென்னை ரயில்வே எஸ்பியாக இருந்த மகேஸ்வரன் சென்னை பூக்கடை துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பூக்கடை துணை கமிஷனராக இருந்த கார்த்திக், ராமநாதபுரம் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ராமநாதபுரம் எஸ்.பி.யாக ஆர்.வி. வருண்குமார் பணிபுரிந்து வந்தார்.