தமிழகத்தில் தொடங்கியது ரமலான் நோன்பு.. அதிகாலையில் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை!
தமிழகத்தில் இன்று காலையில் இருந்து ரமலான் நோன்பு தொடங்கியது.
சென்னை: தமிழகத்தில் இன்று காலையில் இருந்து ரமலான் நோன்பு தொடங்கியது. இதையடுத்து பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றுதான் ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது. இஸ்லாமியர்கள் அனைவரும் உலகம் முழுக்க தவறாது இதை கடைபிடிப்பார்கள். தானம், தர்மம், பசி, அன்பு இதை உணரவும், மக்களிடத்தில் ஒற்றுமையை அதிகரிக்கவும் இந்த பண்டிகை கடைபிடிக்கப்படுகிறது.
எப்போதும் ரமலான் மாதத்தின் முதல் பிறை காணப்பட்ட பின் நோன்பு கடைபிடிக்கப்படும். உலகம் முழுக்க இது ஒருநாள், அல்லது சில மணி நேர இடைவெளியில் கடைபிடிக்கப்படும். இதை தமிழக அரசின் தலைக்கு காஜிதான் எப்போதும் அறிவிப்பார்.
அந்த வகையில், இந்த ஆண்டின் ரமலான் நோன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இன்று காலையில் இருந்து இஸ்லாமியர்கள் தங்கள் நோன்பை தொடங்கினார்கள்.
அதிமுகவில் யாரெல்லாம் அதிருப்தியில் இருக்காங்க.. லிஸ்ட் போட்டுத் தூக்க தயாராகும் தினகரன்
காலையில் சூரியன் எழும் முன் எழுந்து, சாப்பிட்டு முடித்துவிட்டு, பின் நாள் முழுக்க நோன்பு இருப்பார்கள். ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் நோன்பு இருந்துவிட்டு, பின் மாலை சூரியன் மறைந்த பின் நோன்பு துறப்பார்கள்.
இதுபோல் 30 நாட்கள் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். அதன்பின் இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது இஸ்லாமியர்களின் வாழ்வில் மிக முக்கியமான பண்டிகை ஆகும். இந்த நிலையில் இன்றுதான் முதல்நாள் நோன்பு தொடங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.